உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித்.. விரைவில் என்.வி.ரமணா ஓய்வு!
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவிக்கு யு.யு.லலித் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.பாப்டே ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அது ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன், உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக, என்.வி. ரமணா கடந்த ஆண்டு ஏப்ரலில் பதவியேற்றார். இவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 26ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனால் நாட்டின் அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் மத்திய சட்ட அமைச்சகம் களமிறங்கியுள்ளது.

எப்போதும் பதவி காலத்தை நிறைவு செய்யும் தலைமை நீதிபதியே, தனக்கு அடுத்து வரப்போகும் தலைமை நீதிபதி யார் என்பதை பரிந்துரை செய்வார். அதுவே வழக்கமான நடைமுறையாக உள்ளது. அதன்படி, தனக்கு அடுத்து யார் பதவிக்கு வர வேண்டும் என்பதை தற்போதைய தலைமை நீதிபதி என் வி ரமணா பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் அவருக்கு கடிதம் எழுதியது.
இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு. லலித் பெயரை பரிந்துரை செய்துள்ளார். இதற்கான பரிந்துரை கடிதத்தை மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளார். புதிய தலைமை நீதிபதியாக யுயு லலித் பொறுப்பேற்கும் பட்சத்தில் அவரது பதவிக்காலம் மூன்று மாதத்திற்கு குறைவாகவே இருக்கும். அவர் வரும் நவம்பர் 8ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தவுடன், நாட்டின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்பார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த யூயூ லலித் உச்ச நீதிமன்ற நேரடி வழக்கறிஞராக, நேரடி நீதிபதியாக நியமிக்கப்பட்டு தலைமை நீதிபதியாக உயர்ந்த இரண்டாவது நீதிபதி ஆவார். இவர் 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு 2ஜி விசாரணையில் மத்திய புலனாய்வு பிரிவின் அரசு சிறப்பு வழக்கறிஞராக ஆஜரானார்.
அதேபோல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக என்.வி. ரமணா, ஒரு வருடம் நான்கு மாதம் பதவி வகித்துள்ளார். இவரது காலகட்டத்தில், நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியத்திற்கு தலைமை ஏற்று 11 உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 255 உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications