உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித்.. விரைவில் என்.வி.ரமணா ஓய்வு!
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவிக்கு யு.யு.லலித் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.பாப்டே ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அது ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன், உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக, என்.வி. ரமணா கடந்த ஆண்டு ஏப்ரலில் பதவியேற்றார். இவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 26ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனால் நாட்டின் அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் மத்திய சட்ட அமைச்சகம் களமிறங்கியுள்ளது.

எப்போதும் பதவி காலத்தை நிறைவு செய்யும் தலைமை நீதிபதியே, தனக்கு அடுத்து வரப்போகும் தலைமை நீதிபதி யார் என்பதை பரிந்துரை செய்வார். அதுவே வழக்கமான நடைமுறையாக உள்ளது. அதன்படி, தனக்கு அடுத்து யார் பதவிக்கு வர வேண்டும் என்பதை தற்போதைய தலைமை நீதிபதி என் வி ரமணா பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் அவருக்கு கடிதம் எழுதியது.
இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு. லலித் பெயரை பரிந்துரை செய்துள்ளார். இதற்கான பரிந்துரை கடிதத்தை மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளார். புதிய தலைமை நீதிபதியாக யுயு லலித் பொறுப்பேற்கும் பட்சத்தில் அவரது பதவிக்காலம் மூன்று மாதத்திற்கு குறைவாகவே இருக்கும். அவர் வரும் நவம்பர் 8ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தவுடன், நாட்டின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்பார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த யூயூ லலித் உச்ச நீதிமன்ற நேரடி வழக்கறிஞராக, நேரடி நீதிபதியாக நியமிக்கப்பட்டு தலைமை நீதிபதியாக உயர்ந்த இரண்டாவது நீதிபதி ஆவார். இவர் 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு 2ஜி விசாரணையில் மத்திய புலனாய்வு பிரிவின் அரசு சிறப்பு வழக்கறிஞராக ஆஜரானார்.
அதேபோல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக என்.வி. ரமணா, ஒரு வருடம் நான்கு மாதம் பதவி வகித்துள்ளார். இவரது காலகட்டத்தில், நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியத்திற்கு தலைமை ஏற்று 11 உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 255 உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications