வேலைக்கு வர இயலாத பணியாளர்களின் ஊதியத்தை பிடிக்கக் கூடாது.. முதல்வர்
டெல்லி: வேலைக்கு வர இயலாத தொழிலாளர்களின் ஊதியத்தை பிடிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் சில மாவட்டங்களை மூட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஆலோசனை செய்தது.

அப்போது கொரோனா பரவலைத் தடுக்க சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய எல்லைகளை நாளை மாலை 6 மணி முதலும் ஏனைய அனைத்து மாவட்டங்களின் எல்லைகளை நாளை மாலை 6 மணி முதல் வரும் 31-ஆம் தேதி வரை மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என அறிவித்துள்ளது. அது போல் காவல் துறை, நீதித் துறை, தீயணைப்புத் துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் மட்டுமே இயங்கும்.
தனியார் நிறுவனங்களும் குறைந்த பணியாளர்களை கொண்டு இயக்கிக் கொள்ளலாம். ஒரு வேளை பணிக்கு வர முடியாத பணியாளர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications