லடாக்கில் 2 பேர்.. தமிழகத்தில் ஒருவர்.. இந்தியாவில் மொத்தம் 39 பேர்.. தீவிரம் அடையும் கொரோனா!
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. லடாக்கில் இருவருக்கும், தமிழகத்தில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சீனாவில் வுஹனின் உருவான வைரஸ் தற்போது உலகை மொத்தமாக ஆட்டிப்படைத்து வருகிறது. சீனாவில் தொடங்கி இருந்தாலும் தற்போது 85 நாடுகளில் இந்த வைரஸ் பரவி இருக்கிறது. மிக மிக சிறிய தீவுகளில் கூட இந்த வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
106065 பேர் உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிப்பு. சீனாவில்தான் அதிகபேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் . சீனாவில் 86045 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க 3600 கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர் . சீனாவில் 3095 பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர்.

இந்தியா எப்படி
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக ஏற்பட்டு வருகிறது. டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.இவர் கடந்த சில வாரங்கள் முன் தாய்லாந்து மற்றும் மலேசியா சென்று திரும்பி உள்ளார். உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்டு இருக்கிறது.

தீவிரம்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலீயல் லடாக்கில் இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. ஈரானுக்கு சென்ற வந்த இரண்டு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் காஷ்மீருக்கும் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்கிறார்கள். இவர்களை தனியாக வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தமிழகம் எப்படி
தமிழகத்திலும் முதல் நபர் ஒருவருக்கு கொரோனா பரவி உள்ளது. இவருக்கு ஓமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பின் கொரோனா ஏற்பட்டுள்ளது. நேற்றுதான் இவருக்கு இந்த வைரஸ் தாக்கியது.இவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவர் தொடர்பு கொண்ட நபர்களை எல்லாம் தற்போது சோதனை செய்த முடிவு செய்துள்ளனர்.

மொத்தம் எவ்வளவு
கேரளாவில் 5 பேருக்கு வைரஸ் ஏற்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் இந்தியாவில் 39 பேருக்கு கொரோனா பரவி இருக்கிறது. இதில் 16 இத்தாலியை சேர்ந்த பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் உள்ளது. இவர்கல தனியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவும் வேகம் 17% அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா இதை சமாளிக்க திணறி வருகிறது.












Click it and Unblock the Notifications