அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. பிரதமர் மோடி டெல்லியில் அவசர மீட்டிங்.. முக்கிய ஆலோசனை!
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி முக்கியமான மீட்டிங் ஒன்றை டெல்லியில் நடத்தி உள்ளார்.
உலகில் இருக்கும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் மிக அதிக அளவில் தினசரி கேஸ்கள் பதிவாகி வருகின்றன. இந்தியாவில் தற்போது 12,485,509 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் 164,655 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.11,629,289 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

இந்தியாவில் தினசரி கேஸ்கள் 1 லட்சத்தை நெருங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் மட்டும் 49497 கேஸ்கள் பதிவாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு இது தொடர்பாக ஏற்கனவே மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
கொரோனா விதிகளை அமல்படுத்தப்படுத்த வேண்டும், மக்களை முறையாக கண்காணிக்க வேண்டும், மாஸ்க், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா விதிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில்தான் தற்போது பிரதமர் மோடி முக்கியமான மீட்டிங் ஒன்றை டெல்லியில் நடத்தி உள்ளார்.
கேபினெட் அதிகாரிகள், செயலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பல்வேறு மாநில பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி உள்ளார். கொரோனா பரவல் குறித்தும், கொரோனா வேக்சின் அளிக்கப்படுவது குறித்தும் பிரதமர் மோடி பேசி உள்ளார்.
கொரோனாவின் புதிய பரவலை எப்படி கட்டுப்படுத்துவத, வேக்சின் அளிக்கப்படும் வேகத்தை அதிகரிப்பது எப்படி என்று பிரதமர் மோடி ஆலோசனை செய்துள்ளார். இந்த ஆலோசனையை தொடர்ந்து முக்கியமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications