ரொம்ப கடன்பட்டு இருக்கோம்.. மன்மோகன் சிங் தான் சிறந்த பொருளாதார நிபுணர்..பாராட்டி தள்ளிய கட்காரி
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தபோது தொடங்கிய பொருளாதார சீர்த்திருத்தங்களால் இந்தியா புதிய திசையை நோக்கி பயணிக்க துவங்கியது. இதற்காக நாடு எப்போதும் அவருக்கு கடன்பட்டுள்ளது என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசினார்.
பாஜக மூத்த தலைவராக இருப்பவர் நிதின் கட்காரி. மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் டிஐஓஎல் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 'TaxIndiaOnline' என்ற அமைப்பு சார்பில் விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

நிதின் கட்காரி பேச்சு
இந்த விழாவில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கை பெருமையாக பேசினார். மேலும் அவரது பொருளாதார சீர்த்திருத்தங்களை புகழ்ந்து தள்ளினார். இதுதொடர்பாக நிதின் கட்காரி பேசியதாவது:

மன்மோகன் சிங்கிற்கு பாராட்டு
1991ல் மத்திய நிதி அமைச்சராக மன்மோகன் சிங் இருந்தார். இவர் தொடங்கிய பொருளாதார சீர்த்திருத்தங்கள் மூலம் இந்தியா புதிய திசையை நோக்கி பயணிக்க துவங்கியது. அது தாராளமய பொருளாதாரத்துக்கு வழிவகுத்தது. இந்த தாராளமயமான பொருளாதார கொள்கை என்பது விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கானது தான். இந்த பொருளாதார சீர்த்திருத்தங்களுக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நாடு கடன்பட்டுள்ளது.

சாலைக்கு பணம் திரட்ட உதவியது
1900 மத்திய பகுதியில் மகாராஷ்டிராவில் அமைச்சராக இருந்தேன். அப்போது மகாராஷ்டிராவில் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த சாலைகளுக்கு தேவையான நிதி திரட்டும் பணி துவங்கியது. இதற்கு மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்த்திருத்தங்கள் கைக்கொடுத்து உள்ளன.

சீனா சிறந்த உதாரணம்
நாட்டின் வளர்ச்சிக்கு தாராளமயமான பொருளாதார கொள்கை எப்படி உதவும் என்பதற்கு சீனா சிறந்த உதாரணமாகும். இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், விரைவுப்படுத்தவும் நாட்டுக்கு அதிக முதலீடு தேவையானதாக உள்ளது. நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சாமானியர்களிடம் இருந்து நிதி திரட்டி வருகிறது.

ரூ.1.40 லட்சம் கோடியாக உயரும்
தற்போது நாட்டில் 26 பசுமை வழி விரைவுச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பணப்பற்றாக்குறை என்பது இல்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சுங்கவரி வருவாய் தற்போது ஆண்டுக்கு 40,000 ஆயிரம் கோடியாக உள்ளது. 2024 இறுதியில் இது ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரிக்கும்'' என்றார்.
-
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications