ரொம்ப கடன்பட்டு இருக்கோம்.. மன்மோகன் சிங் தான் சிறந்த பொருளாதார நிபுணர்..பாராட்டி தள்ளிய கட்காரி
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தபோது தொடங்கிய பொருளாதார சீர்த்திருத்தங்களால் இந்தியா புதிய திசையை நோக்கி பயணிக்க துவங்கியது. இதற்காக நாடு எப்போதும் அவருக்கு கடன்பட்டுள்ளது என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசினார்.
பாஜக மூத்த தலைவராக இருப்பவர் நிதின் கட்காரி. மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் டிஐஓஎல் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 'TaxIndiaOnline' என்ற அமைப்பு சார்பில் விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

நிதின் கட்காரி பேச்சு
இந்த விழாவில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கை பெருமையாக பேசினார். மேலும் அவரது பொருளாதார சீர்த்திருத்தங்களை புகழ்ந்து தள்ளினார். இதுதொடர்பாக நிதின் கட்காரி பேசியதாவது:

மன்மோகன் சிங்கிற்கு பாராட்டு
1991ல் மத்திய நிதி அமைச்சராக மன்மோகன் சிங் இருந்தார். இவர் தொடங்கிய பொருளாதார சீர்த்திருத்தங்கள் மூலம் இந்தியா புதிய திசையை நோக்கி பயணிக்க துவங்கியது. அது தாராளமய பொருளாதாரத்துக்கு வழிவகுத்தது. இந்த தாராளமயமான பொருளாதார கொள்கை என்பது விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கானது தான். இந்த பொருளாதார சீர்த்திருத்தங்களுக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நாடு கடன்பட்டுள்ளது.

சாலைக்கு பணம் திரட்ட உதவியது
1900 மத்திய பகுதியில் மகாராஷ்டிராவில் அமைச்சராக இருந்தேன். அப்போது மகாராஷ்டிராவில் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த சாலைகளுக்கு தேவையான நிதி திரட்டும் பணி துவங்கியது. இதற்கு மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்த்திருத்தங்கள் கைக்கொடுத்து உள்ளன.

சீனா சிறந்த உதாரணம்
நாட்டின் வளர்ச்சிக்கு தாராளமயமான பொருளாதார கொள்கை எப்படி உதவும் என்பதற்கு சீனா சிறந்த உதாரணமாகும். இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், விரைவுப்படுத்தவும் நாட்டுக்கு அதிக முதலீடு தேவையானதாக உள்ளது. நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சாமானியர்களிடம் இருந்து நிதி திரட்டி வருகிறது.

ரூ.1.40 லட்சம் கோடியாக உயரும்
தற்போது நாட்டில் 26 பசுமை வழி விரைவுச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பணப்பற்றாக்குறை என்பது இல்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சுங்கவரி வருவாய் தற்போது ஆண்டுக்கு 40,000 ஆயிரம் கோடியாக உள்ளது. 2024 இறுதியில் இது ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரிக்கும்'' என்றார்.
-
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ்












Click it and Unblock the Notifications