ALERT: கோவேக்சின் தடுப்பூசி போட்டாச்சா.. அப்ப "இதை" மட்டும் செய்யாதீங்க.. முக்கிய தகவல்!
பயோடெக் நிறுவனம் ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளது
டெல்லி: கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, பாரசிட்டமால் (Paracetamol) மற்றும் வலி மாத்திரைகளை (Pain killers) எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது... இது தொடர்பாக ஒரு அறிக்கையையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது..
இந்தியாவில் மறுபடியும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது... 3வது அலையின் தொடக்க நிலையில் சுகாதார வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்தபடியே இருக்கிறார்கள்.
அனைவரும் மாஸ்க் போட வேண்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென மருத்துவ நிபுணர்களும் அறிவுறுத்தியபடியே இருக்கிறார்கள்..

பாதிப்பு
வைரஸின் தாக்கத்தையும், பாதிப்பையும் குறைக்க தடுப்பூசி பாதுகாப்பாக கருதப்படுகிறது.. அந்த வகையில், இந்தியாவில் ஏற்கெனவே பல கோடிக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது... தற்போதும் அந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது.. எனினும், கடந்த சில தினங்களுக்கு முன்பிருந்தே, 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.

எச்சரிக்கைகள்
எனவே, இது தொடர்பான சில தகவல்களும், ஓரிரு எச்சரிக்கைகளும் வெளிவர தொடங்கியுள்ளன... காரணம், தடுப்பூசியிலேயே பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.. அதனால், கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை தற்போது வெளியாகியுள்ளது.. கோவாக்சின் தடுப்பூசியை ஹைதராபாத்தில் இயங்கி வரும் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது...

பயோடெக் நிறுவனம்
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, பாரசிட்டமால் (Paracetamol) மற்றும் வலி மாத்திரைகளை (Pain killers) எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளது.. அதில், "கோவாக்சின் தடுப்பூசி போட்ட சிறுவர்களுக்கு மூன்று 500 மில்லிகிராம் பாரசிட்டமால் மாத்திரைகளை தடுப்பூசி மையங்கள் பரிந்துரைப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது... கோவாக்சின் போட்ட பிறகு பாரசிட்டமால் அல்லது வலி மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தேவையில்லை.
Recommended Video

டெஸ்ட்கள்
மற்ற கொரோனா தடுப்பூசிகளை போட்ட பின் பாரசிட்டமால் மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், கோவாக்சின் போட்டவர்களுக்கு பாரசிட்டமால் மாத்திரை தேவையில்லை" என்று தெரிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட 30,000 நபர்களிடம் இதற்கான டெஸ்ட் நடத்தப்பட்டுள்ளது.. அப்போது, சுமார் 10-20 சதவீத நபர்களுக்கு பக்க விளைவுகள் இருந்தனவாம்.. இவற்றில் பெரும்பாலானவை லேசானவை மற்றும் 1-2 நாட்களுக்குள் குணமாகக்கூடியவை என்பதால், அதற்கு மருந்து தேவையில்லை என்றும் டாக்டரை அணுகிய பின்னரே மருந்து பரிந்துரைக்கப்படும் என்றும் பாரத் பயோடெக் அந்த அறிக்கையில் விளக்கமாக தெரிவித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications