ALERT: கோவேக்சின் தடுப்பூசி போட்டாச்சா.. அப்ப "இதை" மட்டும் செய்யாதீங்க.. முக்கிய தகவல்!
பயோடெக் நிறுவனம் ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளது
டெல்லி: கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, பாரசிட்டமால் (Paracetamol) மற்றும் வலி மாத்திரைகளை (Pain killers) எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது... இது தொடர்பாக ஒரு அறிக்கையையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது..
இந்தியாவில் மறுபடியும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது... 3வது அலையின் தொடக்க நிலையில் சுகாதார வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்தபடியே இருக்கிறார்கள்.
அனைவரும் மாஸ்க் போட வேண்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென மருத்துவ நிபுணர்களும் அறிவுறுத்தியபடியே இருக்கிறார்கள்..

பாதிப்பு
வைரஸின் தாக்கத்தையும், பாதிப்பையும் குறைக்க தடுப்பூசி பாதுகாப்பாக கருதப்படுகிறது.. அந்த வகையில், இந்தியாவில் ஏற்கெனவே பல கோடிக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது... தற்போதும் அந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது.. எனினும், கடந்த சில தினங்களுக்கு முன்பிருந்தே, 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.

எச்சரிக்கைகள்
எனவே, இது தொடர்பான சில தகவல்களும், ஓரிரு எச்சரிக்கைகளும் வெளிவர தொடங்கியுள்ளன... காரணம், தடுப்பூசியிலேயே பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.. அதனால், கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை தற்போது வெளியாகியுள்ளது.. கோவாக்சின் தடுப்பூசியை ஹைதராபாத்தில் இயங்கி வரும் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது...

பயோடெக் நிறுவனம்
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, பாரசிட்டமால் (Paracetamol) மற்றும் வலி மாத்திரைகளை (Pain killers) எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளது.. அதில், "கோவாக்சின் தடுப்பூசி போட்ட சிறுவர்களுக்கு மூன்று 500 மில்லிகிராம் பாரசிட்டமால் மாத்திரைகளை தடுப்பூசி மையங்கள் பரிந்துரைப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது... கோவாக்சின் போட்ட பிறகு பாரசிட்டமால் அல்லது வலி மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தேவையில்லை.
Recommended Video

டெஸ்ட்கள்
மற்ற கொரோனா தடுப்பூசிகளை போட்ட பின் பாரசிட்டமால் மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், கோவாக்சின் போட்டவர்களுக்கு பாரசிட்டமால் மாத்திரை தேவையில்லை" என்று தெரிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட 30,000 நபர்களிடம் இதற்கான டெஸ்ட் நடத்தப்பட்டுள்ளது.. அப்போது, சுமார் 10-20 சதவீத நபர்களுக்கு பக்க விளைவுகள் இருந்தனவாம்.. இவற்றில் பெரும்பாலானவை லேசானவை மற்றும் 1-2 நாட்களுக்குள் குணமாகக்கூடியவை என்பதால், அதற்கு மருந்து தேவையில்லை என்றும் டாக்டரை அணுகிய பின்னரே மருந்து பரிந்துரைக்கப்படும் என்றும் பாரத் பயோடெக் அந்த அறிக்கையில் விளக்கமாக தெரிவித்துள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications