இந்தியாவில் 'பேரழிவை' ஏற்படுத்திய கொரோனா 2ஆம் அலை.. மற்ற நாடுகளுக்கு மிகப் பெரிய எச்சரிக்கை
டெல்லி: கொரோனா 2ஆம் அலையால் இந்தியாவில் பேரழிவு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சர்வதேச நிதியம், கொரோனாவால் எந்தளவு மோசமான பாதிப்பு ஏற்படும் என்பதற்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது
உலகின் பல நாடுகளும் கொரோனா வைரஸ் 2ஆம் அலையால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, 2ஆம் அலையால் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்பு என்பது மிக மோசமாகவே இருந்தது.
இம்மாத தொடக்கத்தில் அதிகபட்சமாகத் தினசரி கொரோனா பாதிப்பு இந்தியாவில் 4.10 லட்சம் வரை சென்றது. அதேபோல தினசரி உயிரிழப்புகளும் 4000ஐ தாண்டியது.

வளரும் நாடுகள்
இந்நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு பற்றி சர்வதேச நிதியம் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "பிரேசில் நாட்டில் மிக மோசமான கொரோனா பாதிப்பிற்குப் பிறகு, இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது வளரும் நாடுகளில் மோசமான நிகழ்வுகள் இன்னும் ஏற்படவில்லை என்பதற்கான அறிகுறியாகவும் கொரோனாவின் பாதிப்பை உணர்த்தும் ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கலாம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மோசமான பாதிப்பு
முதல் அலையை இந்தியாவின் சுகாதார உட்கட்டமைப்பு சிறப்பாகச் சமாளித்தது. ஆனால், 2ஆம் அலையில் நிலைமை அப்படியிருக்கவில்லை. நாட்டில் பலர் ஆக்சிஜன் இல்லாமலும், மருத்துவ வசதிகள் கிடைக்காமலும் உயிரிழந்தனர். மற்ற வளரும் நாடுகளில், குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள், கொரோனாவால் எந்தளவுக்கு மிக மோசமாகப் பாதிக்கப்படலாம் என்பதையே இது காட்டுகிறது.

கொரோனா தடுப்பூசி
தற்போதைய சூழலில் இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவில் 35% வரையிலான மக்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்த முடியும். நாட்டிலுள்ள 60% மக்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்த உடனடியாக அதிகளவிலான தடுப்பூசிகளுக்கு இந்தியா ஆர்டர் அளிக்க வேண்டும். மத்திய அரசு தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ள ஊக்கத் தொகை கண்டிப்பாக உற்பத்தியை அதிகரிக்கும். இதுபோல தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி பாதிப்பு
தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த இந்தியா குறைந்தபட்சம் 100 கோடி தடுப்பூசிகளை உடனடியாக ஆர்டர் கொடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் தடுப்பூசிகளின் மூலப்பொருட்களில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக உற்பத்தி பாதிக்கப்படலாம். எனவே, மற்ற வழிகளைப் பயன்படுத்தி, தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications