மாணவர்கள் மனதளவில் பாதிப்பு...பள்ளிகளை திறக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
பள்ளிகளை விரைவில் திறப்பதே நல்லது என்று நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாதது அந்தந்த குடும்பங்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித
டெல்லி: பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கவனிக்காமல் விட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எனவே பள்ளிகளை விரைவில் திறப்பதே நல்லது என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு முதலே பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் நடந்தாலும் அது மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை. வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதால் மாணவர்களின் இயல்பில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் செல்போன், லேப்டாப் கையுமாக இருப்பதால் அவர்களின் விளையாட்டுத் திறன் தினசரி நடவடிக்கைகளில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பள்ளி வாழ்க்கையையே மாணவர்கள் இழந்து விட்டதால் அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் உருவாகி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா அலை சற்றே ஓய்ந்திருந்தாலும் மூன்றாவது அலை தீவிரமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதால் பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா என்று பல மாநில அரசு யோசித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசிகப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 50 சதவிகித மாணவர்களுடன் மேற்கண்ட பள்ளி மாணவர்களுக்கான வகுப்பை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலான மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளிகள் திறப்பதையே விரும்புகின்றனர்.

நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை
இதனிடையே மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஓராண்டுக்கு மேலாகி விட்டது என்றும் இது அவர்களை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளது என்றும் நிலைக்குழு கூறியுள்ளது. பள்ளிகள் மூடலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில்கொண்டு அவற்றை திறப்பதைக் கூட ஆலோசிக்கலாம் என்றும் சஹஸ்ரபுத்தே தலைமையிலான எம்.பி.க்கள் குழு நாடாளுமன்றத்தில் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாதது அந்தந்த குடும்பங்களை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது, பள்ளிகளை இரு ஷிஃப்டுகளில் பாடங்களை சொல்லித்தருவது, வேறுவேறு நாட்களில் வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற பள்ளிகளை திறக்கலாம் என அந்தக் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
கடந்த 2020-2021ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று பாடங்களைப் படிக்காமலேயே தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புகளுக்கு சென்று விட்டனர். நடப்பு கல்வியாண்டிலாவது பள்ளிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications