வங்க கடலில் உருவாகும் புதிய புரேவி புயல்... தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
சென்னை: வங்க கடலில் புதிய புரேவி புயல் உருவாகும் நிலையில் தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறி நாகை அல்லது கடலூர் பகுதியில் கரையை கடக்கும் என கூறப்படுகிறது. இதற்கு புரேவி அல்லது புரவி அல்லது புரெவி புயல் என பெயரிடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் ராமேஸ்வரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று 1 மணிநேரமாக மழை வெளுத்து எடுத்தது. இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காரைக்கால் பகுதியில் இருந்தும் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications