Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆன்லைனில் ஆசிட்! கருகிய மாணவியின் முகம்.. பிளிப்கார்ட், அமேசானுக்கு டெல்லி மகளிர் ஆணையம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் பட்டப்பகலில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பிளிப்கார்ட் மூலம் ஆசிட் வாங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து டெல்லி மகளிர் ஆணையம் 'அமேசான்' மற்றும் 'பிளிப்கார்ட்' தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

டெல்லியின் துவாரகா பகுதியில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் பள்ளி செல்வதற்காக 12ம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவர் தனது சகோதரியுடன் பேருந்து நிலையத்தில் காத்திருந்திருக்கிறார்.

அப்போது முகமூடி அணிந்து பைக்கில் வந்த இருவர் மாணவி மீது ஆசிட் வீசி சென்றுள்ளனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 ஏமாற்றம்

ஏமாற்றம்

இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது மாணவி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு முகத்தில் மட்டும் 8% தீக்காயம் ஏற்பட்டுள்ளது. கண்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, "அரோரா எனும் 18 வயதுடைய இளைஞனும் பள்ளி மாணவியும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்து மாணவி பிரிந்து சென்றுள்ளார். இதனை ஏற்காத அரோரா என்ன செய்வதென்று தெரியாமல் தனது நண்பர்களான ஹர்ஷித் அகர்வால் (19), வீரேந்திர சிங் (22) ஆகியோரிடம் புலம்பியுள்ளார்.

 மூளைச்சலவை

மூளைச்சலவை

இதனையடுத்து நண்பர்கள் இந்த மோசமான ஐடியாவை கொடுத்திருக்கிறார்கள். திட்டத்தின்படி ஆன்லைன் போர்ட்டலில் ஆசிடை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். இதற்கு இ-வாலட் மூலம் பணம் செலுத்தியுள்ளனர். பிளிப்கார்ட்டிலிருந்து இந்த ஆசிட் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மறுநாள் மாணவி மீது ஆசிட் வீச தயாராகியுள்ளனர். இதற்கிடையில் அரோராவை மற்ற இருவரும் நன்றாக மூளைச்சலவை செய்துள்ளனர். இதன் காரணமாக அரோரா இத்தாக்குதலுக்கு முழுவீச்சில் தயாராகியுள்ளார்.

திட்டம்

திட்டம்


அடுத்தநாள் காலையில் அகர்வால் பைக்கை ஓட்ட அரோரா பின்னாள் அமர்ந்துகொண்டு அந்த பகுதியை சுற்றி நோட்டம் விட்டுள்ளனர். காலை 7 மணி என்பதால் பெரிய அளவுக்கு ஆள் நடமாட்டம் இருந்திருக்கவில்லை. இதனையடுத்து இரண்டாவது ரவுண்டில் கையோடு ஆசிடை கொண்டு சென்று பஸ் ஸ்டாபில் நின்றிருந்த மாணவியின் முகத்தின் மீது வீசியுள்ளனர். ஆசிட் பட்ட அடுத்த சில நொடிகளில் மாணவி துடிதுடித்துள்ளார். இந்த காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதற்கடுத்து இந்த பைக்கையும் அரோராவின் செல்போனையும் வீரேந்திர சிங் மறைவான இடத்தில் கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்.

 கடிதம்

கடிதம்

இதன் காரணமாக குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. பின்னர் நேற்று மூவரையும் நாங்கள் கைது செய்தோம். மாணவி தற்போது வரை ஐசியுவில்தான் சிகிச்சை பெற்று வருகிறார்" என்று கூறியுள்ளனர். ஆசிட் பிளிப்கார்ட்டில் வாங்கப்பட்டது தெரிய வந்ததையடுத்து டெல்லி மகளிர் ஆணையம் 'அமேசான்' மற்றும் 'பிளிப்கார்ட்' தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில் "ஆபத்தான ஆசிட் உங்கள் இணையதளத்தில் எளிதாக கிடைக்கிறது. இது சட்டத்திற்கு புறம்பானது" என்று குறிப்பிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+