ஆன்லைனில் ஆசிட்! கருகிய மாணவியின் முகம்.. பிளிப்கார்ட், அமேசானுக்கு டெல்லி மகளிர் ஆணையம் எச்சரிக்கை
டெல்லி: டெல்லியில் பட்டப்பகலில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பிளிப்கார்ட் மூலம் ஆசிட் வாங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து டெல்லி மகளிர் ஆணையம் 'அமேசான்' மற்றும் 'பிளிப்கார்ட்' தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
டெல்லியின் துவாரகா பகுதியில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் பள்ளி செல்வதற்காக 12ம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவர் தனது சகோதரியுடன் பேருந்து நிலையத்தில் காத்திருந்திருக்கிறார்.
அப்போது முகமூடி அணிந்து பைக்கில் வந்த இருவர் மாணவி மீது ஆசிட் வீசி சென்றுள்ளனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஏமாற்றம்
இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது மாணவி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு முகத்தில் மட்டும் 8% தீக்காயம் ஏற்பட்டுள்ளது. கண்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, "அரோரா எனும் 18 வயதுடைய இளைஞனும் பள்ளி மாணவியும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்து மாணவி பிரிந்து சென்றுள்ளார். இதனை ஏற்காத அரோரா என்ன செய்வதென்று தெரியாமல் தனது நண்பர்களான ஹர்ஷித் அகர்வால் (19), வீரேந்திர சிங் (22) ஆகியோரிடம் புலம்பியுள்ளார்.

மூளைச்சலவை
இதனையடுத்து நண்பர்கள் இந்த மோசமான ஐடியாவை கொடுத்திருக்கிறார்கள். திட்டத்தின்படி ஆன்லைன் போர்ட்டலில் ஆசிடை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். இதற்கு இ-வாலட் மூலம் பணம் செலுத்தியுள்ளனர். பிளிப்கார்ட்டிலிருந்து இந்த ஆசிட் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மறுநாள் மாணவி மீது ஆசிட் வீச தயாராகியுள்ளனர். இதற்கிடையில் அரோராவை மற்ற இருவரும் நன்றாக மூளைச்சலவை செய்துள்ளனர். இதன் காரணமாக அரோரா இத்தாக்குதலுக்கு முழுவீச்சில் தயாராகியுள்ளார்.

திட்டம்
அடுத்தநாள் காலையில் அகர்வால் பைக்கை ஓட்ட அரோரா பின்னாள் அமர்ந்துகொண்டு அந்த பகுதியை சுற்றி நோட்டம் விட்டுள்ளனர். காலை 7 மணி என்பதால் பெரிய அளவுக்கு ஆள் நடமாட்டம் இருந்திருக்கவில்லை. இதனையடுத்து இரண்டாவது ரவுண்டில் கையோடு ஆசிடை கொண்டு சென்று பஸ் ஸ்டாபில் நின்றிருந்த மாணவியின் முகத்தின் மீது வீசியுள்ளனர். ஆசிட் பட்ட அடுத்த சில நொடிகளில் மாணவி துடிதுடித்துள்ளார். இந்த காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதற்கடுத்து இந்த பைக்கையும் அரோராவின் செல்போனையும் வீரேந்திர சிங் மறைவான இடத்தில் கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்.

கடிதம்
இதன் காரணமாக குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. பின்னர் நேற்று மூவரையும் நாங்கள் கைது செய்தோம். மாணவி தற்போது வரை ஐசியுவில்தான் சிகிச்சை பெற்று வருகிறார்" என்று கூறியுள்ளனர். ஆசிட் பிளிப்கார்ட்டில் வாங்கப்பட்டது தெரிய வந்ததையடுத்து டெல்லி மகளிர் ஆணையம் 'அமேசான்' மற்றும் 'பிளிப்கார்ட்' தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில் "ஆபத்தான ஆசிட் உங்கள் இணையதளத்தில் எளிதாக கிடைக்கிறது. இது சட்டத்திற்கு புறம்பானது" என்று குறிப்பிட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications