Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3வது நாளாக மோசமான நிலையில் காற்றின் தரம்.. சுவாசிக்க திணறும் டெல்லி மக்கள்.. மருத்துவர்கள் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மூன்றாவது நாளாக இன்றும் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் நீடிக்கின்றது.

தீபாவளிக்கு பின்பாக வருடா வருடம் டெல்லியில் அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை காற்று மாசு கொஞ்சம் கொஞ்சமாக டெல்லியில் அதிகரித்துக்கொண்டே செல்லும்.

இந்த நிலையில்தான் கடந்த முறையை போல இந்த முறையும் டெல்லியில் காற்று மாஸை கட்டுப்படுத்த தீபாவளி அன்று வெடிவெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தடையை மீறி டெல்லியில் பல இடங்களில் வெடிகள் வெடிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் பல பகுதிகளில் காற்று மாசு அளவு 600 புள்ளிகளை தாண்டியது.

தரம் என்ன?

தரம் என்ன?


அபாயகரமான அளவை டெல்லி காற்று மாசு எட்டியது. இந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் டெல்லியில் காற்று மாசு அளவு மோசமான நிலையில் நீடிக்கின்றது. அபாயகரமான நிலையில் இருந்து நேற்று மோசமான நிலைக்கு மாறிய டெல்லி காற்று மாசு அளவு இன்றும் அதே நிலையில் நீடிக்கிறது. டெல்லியில் காற்று மாசு புள்ளிகள் 436 ஆக உள்ளது.

டெல்லி

டெல்லி

அதேபோல் டெல்லியை சுற்றி இருக்கும் நகரங்களிலும் காற்றின் தரம் மோசமாகி உள்ளது. காசியாபாத்தில் காற்று மாசு புள்ளிகள் 458 ஆக உள்ளது. அதேபோல் நொய்டாவில் 455 ஆக உள்ளது. பரிதாபாத்தில் 449 ஆக உள்ளது. டெல்லி தவிர்த்து ஹரியானா, உத்தர பிரதேசம், உத்தரகாண்டில் காற்றின் தரம் மோசமாக உள்ளது.

தீபாவளி

தீபாவளி

தீபாவளிதான் இந்த காற்று மாசுபடுத்தலுக்கு முக்கிய காரணம் ஆகும். அதே சமயம் நேற்று உத்தரகாண்ட் பகுதியில் சில இடங்களில் விவசாய நிலைகளில் வைக்கோல்களை எரித்துள்ளனர். பழைய விளை நிலங்களில் உள்ள விவசாய குப்பைகளை மக்கள் எரித்ததும் புகை தொடர்ந்து நீடிக்க ஒருவகையில் காரணம் ஆகி உள்ளது. டெல்லியில் இதனால் பலருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வருகின்றன. அதேபோல் வயதானவர்களுக்கு கண் எரிச்சல், இருமல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எய்ம்ஸ்

எய்ம்ஸ்

இந்த நிலையில் காற்று மாசு குறித்து எய்ம்ஸ் தலைமை மருத்துவர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், மோசமான தரம் கொண்ட காற்று நுரையீரலை பாதிக்கும். இது கொரோனா காலம் என்பதால் இரட்டை பாதிப்பிற்கு வாய்ப்பு உள்ளது. நுரையீரலில் இதனால் வீக்கம் ஏற்பட வாய்ப்புகளும் உள்ளன. உடலின் மற்ற பகுதிகளையும் இதனால் புகை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+