டெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு
டெல்லி: மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனையடுத்து விவசாயிகளுடன் எந்த நேரத்திலும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் - விவசாய சட்டங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானது; விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது என்பது குற்றச்சாட்டு. இதனால் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதன் உச்சகட்டமாக டெல்லியை நோக்கி குடும்பம் குடும்பமாக விவசாயிகள் அணிதிரண்டனர். விவசாயிகள் போராட்ட வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய எழுச்சியுடன் பஞ்சாப், ஹரியானாவில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் டெல்லியை நோக்கி திரண்டனர். இவர்கள் அனைவரையும் ஹரியானா அரசு தடுத்து பார்த்தது; டெல்லி எல்லையில் தடுத்து பார்த்தனர்.
ஆனால் போலீசாரின் தடியடிகள், கண்ணீர்புகை குண்டு வீச்சுகள் என அத்தனை ஒடுக்குமுறைகளையும் எதிர்கொண்டு டெல்லிக்குள் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலையை விவசாயிகளின் வீரமிக்க போராட்டம் உருவாக்கி உள்ளது. டெல்லியில் தற்போது புராரி நிரங்காரி மைதானத்தில் விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டு போராட்டங்க்ளை நடட்தி வருகின்றனர்.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்த விவசாயிகளுக்கான உணவுகளை குருத்வாராக்களும் ஆம் ஆத்மி கட்சியினரும் செய்துள்ளனர். தங்களிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கை. சமூக ஆர்வலர் மேதா பட்கர் உள்ளிட்டோரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், ஏற்கனவே டிசம்பர் 3-ந் தேதியன்று 32 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. போராட்டத்தை விவசாயிகள் கைவிடுவது தொடர்பாக அவர்களுடன் எந்த நேரத்திலும் பேசுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications