டெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு
டெல்லி: மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனையடுத்து விவசாயிகளுடன் எந்த நேரத்திலும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் - விவசாய சட்டங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானது; விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது என்பது குற்றச்சாட்டு. இதனால் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதன் உச்சகட்டமாக டெல்லியை நோக்கி குடும்பம் குடும்பமாக விவசாயிகள் அணிதிரண்டனர். விவசாயிகள் போராட்ட வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய எழுச்சியுடன் பஞ்சாப், ஹரியானாவில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் டெல்லியை நோக்கி திரண்டனர். இவர்கள் அனைவரையும் ஹரியானா அரசு தடுத்து பார்த்தது; டெல்லி எல்லையில் தடுத்து பார்த்தனர்.
ஆனால் போலீசாரின் தடியடிகள், கண்ணீர்புகை குண்டு வீச்சுகள் என அத்தனை ஒடுக்குமுறைகளையும் எதிர்கொண்டு டெல்லிக்குள் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலையை விவசாயிகளின் வீரமிக்க போராட்டம் உருவாக்கி உள்ளது. டெல்லியில் தற்போது புராரி நிரங்காரி மைதானத்தில் விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டு போராட்டங்க்ளை நடட்தி வருகின்றனர்.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்த விவசாயிகளுக்கான உணவுகளை குருத்வாராக்களும் ஆம் ஆத்மி கட்சியினரும் செய்துள்ளனர். தங்களிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கை. சமூக ஆர்வலர் மேதா பட்கர் உள்ளிட்டோரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், ஏற்கனவே டிசம்பர் 3-ந் தேதியன்று 32 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. போராட்டத்தை விவசாயிகள் கைவிடுவது தொடர்பாக அவர்களுடன் எந்த நேரத்திலும் பேசுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம் என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications