பிறந்து ஒருநாளே ஆன பச்சை குழந்தையுடன் கொரோனா சிகிச்சைக்கு வந்த தாய்.. கதவை மூடிய டெல்லி மருத்துவமனை
டெல்லி: டெல்லியில் ஒருநாள் கைக்குழந்தையுடன் கொரோனா சிகிச்சை பெறுவதற்கு வந்த தாய்க்கு படுக்கை இல்லை என கூறி கதவை மூடி இருக்கிறது டெல்லி குரு தேஜ்பகதூர் மருத்துவமனை.
டெல்லியில் கொரோனாவின் கோரத்தாண்டவம் உச்சகட்டமாக உள்ளது. ஒரு மணிநேரத்துக்கு 12 பேர் கொரோனாவால் மரணிக்கிற பேரவலம் நிகழ்கிறது.

டெல்லி மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகியவற்றால் யாரையும் புதியதாக சிகிச்சைக்கு சேர்க்கவும் மறுக்கின்றனர். டெல்லி குருதேஜ்பகதூர் மருத்துவமனையில் இப்படியான ஒரு காட்சியும் அரங்கேறியது.
பிறந்து ஒருநாளே ஆன பச்சை கைக் குழந்தையுடன் கொரோனா சிகிச்சைக்காக தாய் மருத்துவமனைக்கு வந்தார். ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ படுக்கைகள் இல்லை, ஆக்சிஜனும் குறிப்பிட்ட அளவுதான் உள்ளது. அதனால் சிகிச்சைக்கு அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்டது.
கைக்குழந்தையுடன் டெல்லி மருத்துவமனையில் அந்த தாயும் அவரது உறவினர்களும் பரிவித்த காட்சியை என்னவென்று எழுதுவது!












Click it and Unblock the Notifications