14 வருட கட்டுமானம்.. 154 மீட்டர் உயர கோபுரம்.. டெல்லியில் திறக்கப்படும் அசத்தல் சிக்னேச்சர் பாலம்!
கடந்த 14 வருடமாக டெல்லியில் கட்டப்பட்டு வந்த மிக பிரம்மாண்ட சிக்னேச்சர் பாலம் நாளை திறக்கப்பட உள்ளது.
டெல்லி: கடந்த 14 வருடமாக டெல்லியில் கட்டப்பட்டு வந்த மிக பிரம்மாண்ட சிக்னேச்சர் பாலம் நாளை திறக்கப்பட உள்ளது.
இந்தியா தற்போது கட்டுமான துறையில் பெரிய பாய்ச்சல் காட்டி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் குஜராத்தில் 182 மீட்டர் உயரம் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறக்கப்பட்டது.
இதுதான் உலகிலேயே பெரிய சிலையாகும். இந்த நிலையில் தற்போது டெல்லியில் மிக பிரமாண்டமான பாலம் ஒன்று திறக்கப்பட உள்ளது.

எத்தனை
இந்த பாலத்திற்கு சிக்னேச்சர் பாலம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது 2004ல் அப்போதைய டெல்லி முதல்வர் ஷீலா தீக்சித் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டது. 2011 திறக்கப்படுவதாக திட்டமிடப்பட்டு தள்ளி தள்ளிப்போய் இப்போது திறக்கப்பட உள்ளது. நாளை காலை இதற்காக விழா நடக்க உள்ளது.

என்ன வடிவம்
இது லேசர் ஒளிவிளக்குளின் திருவிழாவுடன் திறக்கப்பட இருக்கிறது. இதுதான் இந்தியாவின் முதல் சமச்சீரற்ற கேபிள்-பாலம் ஆகும். இது ஒரு பக்கத்தில் இருந்து பார்க்க கையெடுத்து வணக்கம் சொல்வதை போலவே இருக்கும். இது இப்போதே மக்களை பெரிய அளவில் கவர ஆரம்பித்து இருக்கிறது.

என்ன உயரம்
இந்த பாலத்தின் மீது மிகப்பெரிய டவர் ஒன்று கட்டப்பட்டு இருக்கிறது. இதன் உச்சத்தில் பைபர் கிளாஸ் மூலம் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதன் உயரம் 154 மீட்டர் ஆகும்.இதன் மீது மக்கள் ஏறி டெல்லி அழகை ரசிக்க முடியும். அதேபோல் இந்த பாலத்தின் நீளம் 154 மீட்டர் ஆகும்.

எப்படி இருக்கிறது
இது மொத்தம் 124 இரும்பு கேபிள்கள் மூலம் தாங்கப்படுகிறது. இதில் 17,300 இரும்பு கம்பிகள், நெட்டுகள், போல்ட்டுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. 6300 டன் வரை இந்த கம்பிகள் தாங்க கூடியது. 460 டன் எடை வரை வாகனங்கள் செல்ல முடியும்.

எதை இணைக்கும்
இது வடக்கு மற்றும் வடகிழக்கு டெல்லியை இணைக்க உள்ளது. யமுனா நதிக்கு மேல் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 வழி பாதை உள்ள பாலம் ஆகும் இது. வெளிப்புற அவுட்டர் ரிங் ரோட்டையும், வாசிராபாத்தையும் இணைக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டு இருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications