காற்று மாசு! மூச்சுத்திணறிய டெல்லி! "ஆக்ஸிஜன் லெவல் ஓகே" .. இன்று முதல் பள்ளிகள் திறப்பு
டெல்லி: காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து டெல்லியில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
தலைநகர் டெல்லியில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் இப்படித்தான் மோசமடையும். இந்த நிலையில் உலகளவில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகியவை இடம் பெற்றுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே காற்றின் தரம் மோசமாக இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது. டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் மோசமான புகை மூட்டத்தால் மக்கள் சுவாசிக்க முடியாத நிலையில் இருந்தனர். டெல்லியில் காற்றின் தர குறியீடு 300 புள்ளிகளை தாண்டி இருந்தது.
இது மிகவும் மோசமான பாதிப்பு ஆகும். இதனால் கடந்த 9ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசு சற்று குறைந்துள்ளதால் இன்று முதல் அனைத்து அரசு , அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதே வேளையில் விளையாட்டு போட்டிகள், சட்டசபை உள்ளிட்டவை அடுத்த 1 வாரத்திற்கு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் கடந்த 8ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது தீபாவளி பண்டிகை அன்று காற்றின் தரம் மேம்பட்டிருந்தது. காற்றின் தரம் 50 க்கு கீழ் இருந்தால் நல்லது. 51 முதல் 100 வரை இருந்தால் திருப்தி, 101 முதல் 200 க்கு இடையே இருந்தால் அது மிதமானது. 201 முதல் 300 இடையே இருந்தால் அது மோசமானது, 301 மற்றும் 400 இடையே இருந்தால் மிக மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications