திராவிட தேசத்தின் தலைவர் ஸ்டாலின்-லோக்சபாவை அதிரவைத்த ஜெகத்ரட்சகனின் இந்தி திணிப்பு எதிர்ப்பு பேச்சு
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று பேசிய திமுக எம்பி ஜெகத்ரட்சகன், திராவிட தேசத்தின் தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என குறிப்பிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
லோக்சபாவில் இன்று திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேசியதாவது: எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு. திராவிட தேசத்தின் தலைவராக, எங்களுடைய தங்க தலைவர் மு.க.ஸ்டாலினின் தொண்டனாக இருந்து பேசுகிறேன்.

திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான நீங்கள் (திமுக ஆ.ராசா) லோக்சபா தலைவர் இருக்கையில் அமர்ந்த நிலையில் நான் பேசுவது மகிழ்ச்சி. எத்தனையோ பெருமைக்குரிய இந்திய ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது என்பது ஜனநாயகப் படுகொலையாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.
இந்திய ரயில்வே துறை 167 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த துறை வளம் கொழிக்கும் நிறுவனமாக விளங்கும் நிலையில் தனியாருக்கு ஏன் தாரை வார்க்கிறார்கள் என்பதுதான் எங்களுக்குப் புரியவில்லை.
முதல் ரயில் நிலையமே அரக்கோணம் தொகுதியில்தான். ஏனெனில் வட இந்தியாவுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் அரக்கோணம் வழியாகவே செல்லும். தலப்பெருமை பெற்ற சோளிங்கரில் எல்லா ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என கேட்டோம். அரக்கோணத்தை 4-வது முனையமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். காட்பாடி வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர். அந்த காட்பாடிக்கு மேம்பாலம் அமைக்க கோரினோம். அதுவும் கிடைக்கவில்லை. ஓராண்டில் ரயில் விபத்தில் 319 பேர் உயிரிழந்துள்ளனர்; மொத்தம் 40 ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன.முந்தைய 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகம்.
சென்னை புறநகர் ரயில்களில் கழிப்பறை வசதி என்பதே கிடையாது; 2 மணிநேர பயணம் மேற்கொள்ளும் நிலையில் கழிப்பறை வசதிகளே இல்லை. ரயில்களில் ஏசி கோச்சை மட்டும் தனியாருக்கு தாரைவார்ப்பது எப்படி நியாயமாகும்?
ரயில்வே துறை என்பதே இந்தி மொழியை திணிப்பதற்கான ஒரு துறையாகவே இருக்கிறது. ரயில்வேயில் தமிழகத்தில் ஆங்கிலம், தமிழில் எழுதுகின்றனர்; இந்தியிலும் எழுதுகின்றனர்; இந்தியில் எழுதுவதை ஒருவரும் படிப்பதும் இல்லை; ரயில்வே துறையில் மாநில மொழிகளே இல்லை. வட மாநிலங்களில் எந்த ரயில் நிலையத்திலும் ஆங்கிலமே இல்லை. தமிழ்நாட்டில் பணிபுரிகிற ரயில்வே பணியாளர்கள் இந்தி மொழி பேசுகிறவர்களாக மட்டுமே இருக்கின்றனர்; இவர்களுக்கு எதுவும் புரியவில்லை; இதுவும் ரயில் விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன. இவ்வாறு ஜெகத்ரட்சகன் பேசினார்.
-
45% வாக்கு உறுதி.. திமுகவின் பரபர இன்டர்னல் சர்வே.. அடித்து மேலே வரும் தவெக விஜய்.. ரகசிய ரிப்போர்ட் -
திமுக ஆட்சியில் 6 மாதம் மும்மொழிக் கொள்கை! அமெரிக்காவில் அண்ணா சொன்ன விளக்கம்! -
ஸ்டாலினின் கையில் அந்த சர்ப்ரைஸ் லிஸ்ட்.. திமுக துரைமுருகன் முதல் பொன்முடி வரை! 15 விஐபிகளுக்கு கிலி? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
திமுகவுக்கு எதிராக மதுரையில் பிரம்மாண்ட அஸ்திரம்.. அதிமுக எடுத்த பெரிய முடிவு -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
பழைய ஓய்வூதிய திட்டம் என்னவானது? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத திமுக அரசு! அன்புமணி கடும் விமர்சனம் -
புதுச்சேரி கூட்டணியில் குஸ்தி.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில் தனித்து போட்டி.. திமுக ஷாக்! -
இதே திருச்சியில் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பை வெளியிட்டேன்.. திருச்சி மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைப்பு -
க்ளோஸ்.. சுள்ளென சுட்டெரிக்கும் உதயசூரியன்.. சூடான தேர்தல் களம்! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த திமுக!












Click it and Unblock the Notifications