ஜம்மு பாணியில்... ஆளில்லா விமானங்கள் ஊடுருவல் அபாயம்: தமிழகம், கேரளாவுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி/சென்னை: ஜம்மு பாணியில் ஆளில்லா விமானங்கள் (டிரோன்கள்) ஊருவும் அபாயம் உள்ளதாக தமிழகம், கேரளாவுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு விமானப் படை தளம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 ஆளில்லா விமானங்களான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் 2 விமானப் படை வீரர்கள் படுகாயமடைந்தனர்.

ஆளில்லா விமானங்கள்

ஆளில்லா விமானங்கள்

விமான படை தளம் கட்டிடம் சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஆளில்லா விமானங்கள் ஜம்மு வான்பரப்பில் பறக்கவிடப்பட்டன. இதனால் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம், கேரளாவுக்கு வார்னிங்

தமிழகம், கேரளாவுக்கு வார்னிங்

இந்த நிலையில் ஆளில்லா விமானங்கள் ஊருவும் அபாயம் இருப்பதாக தமிழகம், கேரளாவுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது தமிழகம், கேரளா வழியாக இந்தியாவுக்குள் ஆளில்லா விமானங்களை ஏவி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் எச்சரித்துள்ளன.

இலங்கையில் சீனா

இலங்கையில் சீனா

ஏற்கனவே தமிழகத்தின் ராமேஸ்வரம் கடற்பரப்பு அருகே இலங்கை பகுதியில் சீனா ஊடுருவி நிற்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகமும் சீனா வசமாகி உள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது.

கேரளா திரும்பிய தீவிரவாதிகள்

கேரளா திரும்பிய தீவிரவாதிகள்

மேலும் சிரியா, ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கேரளாவுக்கு திரும்பி உள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த பின்னணியில்தான் தமிழகம், கேரளா வழியாக இந்தியாவுக்குள் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+