கர்நாடகா தேர்தலில் போட்டி-அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்தே ஆகனும்-தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் அடம்!
டெல்லி: கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதால் தம்மை அக்கட்சி பொதுச்செயலாளராக இன்றே அங்கீகரிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமியை இதுவரை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கவில்லை.

இதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில், தம்மை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தாங்கள் முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் கேட்டது தேர்தல் ஆணையம். இதற்கு டெல்லி உயர்நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.
அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது; அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகவே இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஒரு மனு தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் கூடி அதிமுக விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறது என செய்திகள் வெளியாகி இருந்தன. இதனிடையே திடீரென கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக அம்மாநில அதிமுக அவைத் தலைவர் அன்பரசனை அறிவித்தார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் போட்டியிட அதிமுக முயற்சித்தது. ஆனால் தற்போது பாஜக வேட்பாளருக்கு எதிராக புலிகேசி நகர் தொகுதியில் அன்பரசனை வேட்பாளராக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
அத்துடன் தேர்தல் ஆணையத்தில் மீண்டும் ஒரு மனு கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதில், கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டார். கர்நாடகாவில் வேட்புமனுத் தாக்கல் நாளை நிறைவடைகிறது. ஆகையால் அதிமுக பொதுச்செயலாளராக தம்மை தேர்ந்தெடுத்ததை இன்றே அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications