12 ராஜ்யசபா எம்பி பதவி காலி இடங்களுக்கு செப்.3-ல் தேர்தல்! ஆக.14 முதல் வேட்பு மனுத் தாக்கல்!
டெல்லி: ராஜ்யசபாவில் காலியாக உள்ள 12 எம்பி பதவி இடங்களுக்கு செப்டம்பர் 3-ந் தேதி தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஆகஸ்ட்
14-ந் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 21. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நாள் ஆக.22 வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஆகஸ்ட் 26 மற்றும் ஆகஸ்ட் 27. ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 3-ந் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அஸ்ஸாம், பீகார், ஹரியானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, (2 இடங்கள்), ராஜஸ்தான், திரிபுரா, தெலுங்கானா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் 12 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் ராஜ்யசபா எம்பிக்களாக இருந்தனர். லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு 3 பேரும் வெற்றி பெற்றதால் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். இதேபோல மிசா பாரதி, கேசி வேணுகோபால், பிப்லாப்குமார் தேவ் உள்ளிட்டோரும் லோக்சபா தேர்தலில் வென்றதால் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். மொத்தம் 10 ராஜ்யசபா எம்பிக்கள், லோக்சபா தேர்தலில் வென்றதால் எம்பி பதவிகளை ராஜினாமா செய்தனர். தெலுங்கானா, ஒடிஷாவை சேர்ந்த இரு எம்பிக்கள் ஜூலை மாதம் எம்பி பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதனால் ராஜ்யசபாவில் மொத்தம் 12 எம்பி பதவி இடங்கள் காலியாக உள்ளன. இந்த 12 இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஆகஸ்ட் 14-ந் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 21. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நாள் ஆக.22 வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஆகஸ்ட் 26 மற்றும் ஆகஸ்ட் 27. ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 3-ந் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications