இரட்டை இலைக்கு லஞ்சம்? டிடிவி தினகரனிடம் மீண்டும் விசாரணை! 10 மணி நேரமாய் பதறவைத்த கேள்விக் கணைகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்ற வழக்கு தொடர்பாக நேரில் ஆஜரான அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

முன்னாள் முதல்வர் மரணத்திற்கு பிறகு நடைபெற்ற ஆர்கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரினர்

இதன் காரணமாக இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணயம் முடக்கிய நிலையில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்

இரட்டை இலைக்கு லஞ்சம்

இரட்டை இலைக்கு லஞ்சம்

இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி காவல்துறையின்ர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் டிடிவி தினகரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

டிடிவி தினகரன் மீது புகார்

டிடிவி தினகரன் மீது புகார்

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறையும் கூடுதலாக ஒரு வழக்கினைப் பதிவு செய்திருந்தது. பணமோசடி தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் லஞ்ச வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

விசாரணைக்கு ஆஜர்

விசாரணைக்கு ஆஜர்

விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அந்த் சம்மனில் கூறப்பட்டிருந்த நிலையில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணைக்காக டிடிவி தினகரன் டெல்லியில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று டிடிவி தினகரன் ஆஜரானார். ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆஜரான நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக ஆஜரான அவரிடம் சுமார்10 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

 கிடுக்குப்பிடி கேள்விகள்

கிடுக்குப்பிடி கேள்விகள்

அந்த விசாரணையின் போது சுகேஷ் சந்திர சேகருடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது, பணம் யாரின் பெயரால் கேட்கப்பட்டது, வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலைக்கு காரணம் என்ன? ஹவாலா கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கிடுக்குப்பிடி கேள்விகளை டிடிவி தினகரனிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கேட்டதாகவும், பெரும்பாலான கேள்விகளுக்கு தனக்கு தெரியாது என அவர் பதிலளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+