பெரிய ஏமாற்றமா இருக்கு.. ஏன் இந்த முடிவு? விவசாய சட்டங்கள் வாபஸ்.. ட்வீட்டரில் வருந்திய பாஜகவினர்!
டெல்லி: விவசாய சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு நாடு முழுக்க ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த அறிவிப்பை வரவேற்று உள்ளனர்.
அதேபோல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இடைவிடாமல் போராடிய விவசாயிகள் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை வரவேற்று உள்ளனர். இன்று காலை 9 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் மோடி விவசாய சட்டங்கள் மூன்றையும் வாபஸ் வாங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
விவசாயிகளுக்கு எப்போதும் நல்லது நினைப்பவன் நான். விவசாய சட்டங்கள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை. அதனால் விவசாய சட்டங்களை வாபஸ் பெறுகிறோம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அறிவிப்பு
பாஜகவினர் சிலர் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி பலரும் பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்று உள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் மக்களின் குரலை ஒரு பிரதமர் கேட்க வேண்டும். நம் பிரதமர் மோடி மக்களின் குரலை கேட்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார். அவர் எப்போதும் மக்களின் குரலுக்கு செவி மடுப்பார் என்று பாஜகவினர் பலர் இந்த முடிவை பாராட்டி வருகிறார்கள்.

ஏற்க முடியவில்லை
ஆனால் இத்தனை நாட்கள் விவசாய சட்டங்களுக்கு ஆதரவு அளித்து, விவசாய போராட்டங்களை எதிர்த்து வந்த பாஜகவினர் சிலரால் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திடீரென இப்படி ஒரு முடிவை எடுத்தது ஏமாற்றமாக இருக்கிறது என்று பாஜகவினர் பலர் ட்வீட் செய்து வருகிறார்கள். #disappointed என்ற டேக்கையும் இவர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள். பாஜக இந்த அறிவிப்பில் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம்.

சட்டம்
இந்த சட்டத்தை அரசு வாபஸ் வாங்காது என்று எதிர்பார்த்தோம். ஆனால் பிரதமர் மோடி சட்டத்தை வாபஸ் வாங்கி உள்ளார். இது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று வலதுசாரி மற்றும் பாஜக ஆதரவு நெட்டிசன்கள் பலர் வருத்தமாக ட்வீட் செய்து வருகிறார்கள். பிரபல பாஜக உறுப்பினர்கள் சிலரும் இதில் ட்வீட் செய்துள்ளனர். இன்னும் சிலரோ விவசாயிகள் இந்த சட்டத்தை புரிந்துகொள்ளவில்லை.

ஏமாற்றம்
விவசாயிகள் இந்த சட்டத்தால் பல வகைகளில் பயன் அடைந்து இருப்பார்கள். ஆனால் இதை எதிர்த்து பேசி, விவசாயிகள் இந்த போராட்டத்தில் உண்மையில் தோல்வி அடைந்துவிட்டனர். இந்த சட்டத்தை வாபஸ் வாங்கியது உண்மையில் இடைதரகர்களுக்கான வெற்றி என்றும் பாஜகவினர் சிலர் வருத்தமாக குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலரோ இந்த அறிவிப்பு மோடியின் இமேஜை கொஞ்சம் குறைத்துவிடும்.
Recommended Video

வலிமை
அவருக்கு இருக்கும் வலிமையான இமேஜுக்கு இதனால் ஆபத்து ஏற்படலாம். மோடி பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பு உள்ளது. பெரிய திட்டங்களை மனதில் வைத்து கூட பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம். ஆனால் போராட்டத்தால் அனைத்தையும் சாதிக்கலாம் என்ற முன்னுதாரணத்தை இது ஏற்படுத்திவிட்டது என்றும் பாஜகவை சேர்ந்த சில நெட்டிசன்கள் ட்வீட்டரில் தெரிவித்துள்ளனர்.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!










Click it and Unblock the Notifications