விரைவில் வழிக்கு வருவார்கள்... விவசாயிகள் போராட்டம் குறித்து அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
டெல்லி: விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள், அதில் இருக்கும் நன்மைகளைப் புரிந்து கொண்டு சுமூகமான தீர்வுக்கு வருவார்கள் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு மூன்று புதிய விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தது. கார்பரேட்களுக்கு உதவும் வகையில் இருக்கும் இச்சட்டங்கள், விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் தொடங்கி சுமார் 40 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையிலும் கூட, இதுவரை மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே எவ்வித சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை. இதுவரை இரு தரப்பினருக்கும் இடையே ஏழு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
இதில் இலவச மின்சாரம், விவசாய கழிவுகளை எரிப்பது தொடர்பான இரு விஷயங்களில் மட்டுமே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவது, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்டவற்றில் சிக்கல் தொடர்கிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "விவசாயிகளின் நலனை காப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. சட்டங்களை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என இரு தரப்பையும் நாங்கள் சந்திக்கிறோம்.
தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இந்த விவசாய சட்டங்களின் பின்னணியில் உள்ள கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகள் பெறும் நலன்கள் குறித்து அவர்கள் சிந்திக்க வேண்டும். பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் விரைவில் அவர்கள் ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
டெல்லியில் தற்போது மிகவும் மோசமான வானிலை நிலவி வருகிறது. ஏற்கனவே, கடும் குளிர் உள்ளிட்ட பல காரணங்களால் டெல்லியில் போராடும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், இன்று மத்திய அரசைக் கண்டித்து நடைபெறவிருந்த டிராக்டர் பேரணியும் மோசமான வானிலை காரணமாக நாளை ஒத்தி வைக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications