பஞ்சாப் பந்த்- விவசாயிகள் உக்கிர போராட்டம்- 150 ரயில்கள் ரத்து- டிராக்டர்கள் பேரணி- சாலை மறியல்!
டெல்லி: விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஹரியானா மாநில எல்லையில் 35-வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் இருக்கும் விவசாயி ஜகஜீத் சிங் தலேவாலுக்கு ஆதரவாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஜகஜீத் சிங் தலேவாலுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பஞ்சாப் பந்த் போராட்டத்தை முன்னிட்டு 150-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உலகை உலுக்கிய போராட்டத்தை ஓராண்டுக்கும் மேலாக டெல்லி வீதிகளில் விவசாயிகள் முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தில் 800 விவசாயிகள் மரணம் அடைந்தனர்.
இந்தப் போராட்டத்தால் மத்திய பாஜக அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. பிரதமர் நரேந்திர மோடியும், விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அப்போது, விவசாயிகளின் வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையிலான சட்டம் கொண்டுவரப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்தது. ஆனால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் விவசாயிகள் மீண்டும் டெல்லியை முற்றுகையிட முயன்றனர். ஆனால் கடந்த பிப்ர்வரி மாதம் விவசாயிகள் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கேயே விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயி ஜகஜீத்சிங் தலோவால் கடந்த 34 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இன்று 35-வது நாளாக இந்தப் போராட்டம் தொடருகிறது. தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயி ஜகஜீத் சிங் தலோவாலை மருத்துவமனையில் அனுமதிக்க உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இந்த பின்னணியில் விவசாயி ஜகஜீத் சிங்குக்கு ஆதரவாக பஞ்சாப் மாநில விவசாயிகள் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனடிப்படையில் இன்று காலை முதல் பஞ்சாப் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு (பஞ்சாப் பந்த்) போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பஞ்சாப் பந்த் போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகள் பல இடங்களில் டிராக்டர்கள் பேரணி நடத்தினர். சாலைகளை மறித்து போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர். விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தால் 150-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகல் ரத்து செய்யப்பட்டன. விவசாயிகளின் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் அசம்பாவிதம் நடக்காத வகையில் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications