தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம்...வேலையிழப்பு...சலுகை பணம்... மோடி அரசு உத்தரவு!!
டெல்லி: தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தில் உறுப்பினராக இருந்து கொரோனா கால கட்டத்தில் வேலையிழந்து இருந்தால், அவர்களுக்கு சலுகைத் தொகையாக 50 சதவீத சம்பளத்தை வழங்குவதற்கு பிரதமர் மோடி அரசு அனுமதித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை வேலையிழந்தவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இதன் மூலம் 40 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இந்தப் பயனை வேலையிழந்தவர்கள் உடனடியாக பெறுவதற்கு நடைமுறைகளில் சில தளர்வுகளை ஏற்படுத்தி இருப்பதாக தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் தெரிவித்துள்ளது.

அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா திட்டத்தை 2021, ஜூன் 30 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. டிசம்பர் 31க்குப் பின்னர் இந்த திட்டத்தில் எந்த தளர்வுகளும் செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வேலையிழப்பு ஏற்பட்டால், 90 நாட்களுக்குப் பின்னர்தான் பணம் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் இதில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு, 30 நாட்கள் என்று குறைக்கப்பட்டுள்ளது.
தாங்கள் பணியாற்றிய நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்காமல், நேரடியாக தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தின் கிளை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு இன்சூரன்ஸ் செலுத்தி, தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். குறைந்தது 78 நாட்களுக்கு பணம் செலுத்தி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் தற்போது அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதம் 21,000த்துக்கும் குறைவாக சம்பளம் பெறுபவர்கள் இந்த கழகத்தில் உறுப்பினர்களாக சேரலாம். இவர்களது அடிப்படை சம்பளத்தில் இருந்து 075% தொழிலாளர்களாலும், 3.25 சதவீதம் நிர்வாகத்தினராலும் செலுத்தப்படும்.












Click it and Unblock the Notifications