இந்தியாவின் கோவாக்சின் சான்றிதழ்:எஸ்டோனியா, கிரிக்ஸ்தான்,பாலஸ்தீனம், மொரிஷியஸ், மங்கோலியா அங்கீகாரம்
டெல்லி: இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து எஸ்டோனியா, கிரிக்ஸ்தான்,பாலஸ்தீனம், மொரிஷியஸ், மங்கோலியா ஆகிய 5 நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் நேற்று காலை வரையில் மொத்தம் 106.31 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 3,36,68,560 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.20% ஆக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப்பின் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரில் இதுவே அதிகமான அளவாகும்.

குறைந்தன ஆக்டிவ் கேஸ்கள்
நாட்டில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1,58,817 ஆக உள்ளது; கடந்த 248 நாட்களில் இது குறைந்த அளவு. நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.46 சதவீதமாக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இது குறைந்த அளவு.

ஆஸ்திரேலியா அங்கீகாரம்
இந்நிலையில் இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி எந்த நிமிடத்திலும் கிடைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.

5 நாடுகள் அங்கீகாரம்
மேலும் எஸ்டோனியா, கிரிக்ஸ்தான்,பாலஸ்தீனம், மொரிஷியஸ், மங்கோலியா ஆகிய 5 நாடுகளிலும் கோவாக்சின் சான்றிதழுக்கு அங்கீகாரம் அளித்திருக்கின்றன. மத்திய அரசின் இந்த சான்றிதழை அங்கீகரிப்பதில் பல நாடுகள் தயக்கம் காட்டி வந்தன. பிரதமர் மோடியின் ஜி20 உச்சி மாநாட்டு பயணத்துக்குப் பின்னர் இந்திய அரசின் சான்றிதழ்களுக்கு அடுத்தடுத்து நாடுகள் அங்கீகாரம் வழங்கி வருகின்றன.
Recommended Video

ஏற்கனவே அனுமதி தந்தவை
நமது மத்திய அரசு வழங்கும் சான்றிதழை ஏற்க தொடக்கத்தில் பிரிட்டன் மறுத்தது. ஆனால் மத்திய அரசு, பிரிட்டனில் இருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவித்தது. இதனையடுத்து நமது சான்றிதழையும் பிரிட்டன் ஏற்றது. அதனை அடுத்து ஹங்கேரி, செர்பியா ஆகியனவும் இந்தியாவின் கொரோனா சான்றிதழை அங்கீகரித்தன.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications