"கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1337 கோடி அபராதம்".. போட்டி ஆணையம் அதிரடி.. ஏன் தெரியுமா?
டெல்லி: ஆண்ட்ராய்டு தளம் மூலமாக கூகுள் நிறுவனம் நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபடுவதாக நுகர்வோர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், கூகுள் நிறுவனத்துக்கு ரூ 1337 கோடி அபராதம் விதித்து போட்டி ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இணைய தேடு பொறி நிறுவனங்களில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ள நிறுவனம் கூகுள்.
இந்த நிறுவனம் செல்போன்களுக்கான ஓஎஸ் என்று சொல்லப்படும் இயங்குதளமான ஆண்ட்ராய்டு சேவையையும் கொடுத்து வருகிறது.

நுகர்வோர்கள் தரப்பில் புகார்
ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலம் ஆனது ஆண்ட்ராய்டுதான். அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலானோர் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் போன்களையே பயன்படுத்தி வருகின்றனர். அந்த அளவுக்கு இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகளில் ஆண்ட்ராய்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த 2019- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆண்ட்ராய்டு தளம் மூலமாக கூகுள் நிறுவனம் நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபடுவதாக நுகர்வோர்கள் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது.

நியாயமற்ற வர்த்தக நடைமுறை
மொபைல் பயன்பாடு விநியோக ஒப்பந்தம் (MADA) மற்றும் Anti Fragmentation Agreement - என்ற இரு ஒப்பந்தங்களை பயன்படுத்தி கூகுள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபடுவதாக புகார்கள் முன்வைக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதன் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.

ரூ.1,337 கோடி ரூபாய் அபராதம்
இந்த நிலையில், கூகுள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டதையடுத்து அந்த நிறுவனத்திற்கு எதிராக ரூ.1,337.76 கோடி ரூபாய் அபராதத்தை விதித்து இந்திய போட்டி ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்களின் சூழலை பயன்படுத்திக்கொண்டு கூகுள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் நடந்துகொண்டதாகவும் இத்தகைய வர்த்தக நடைமுறையை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் கூகுள் தனது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் இந்திய போட்டி ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நியாயமான வாய்ப்பை வழங்கவில்லை
மேலும் இது தொடர்பாக தனது விரிவான உத்தரவில் இந்திய போட்டி ஆணையம் கூறுகையில், ''மொபைல் பயன்பாடு விநியோக ஒப்பந்தத்தை பயன்படுத்தி கட்டாயமாக கூகுள் நிறுவனங்களின் செயலிகளை கட்டாயமாக முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்படுவதோடு அதை அன் இன்ஸ்டால் செய்வதற்கான எந்த வாய்ப்பும் வழங்கவில்லை. அதேபோல், இணைய தேடலிலும் கூகுள் தனது ஆதிக்க நிலையை வைத்து போட்டி நிறுவனங்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்கவில்லை'' என்று தெரிவித்துள்ளது.

பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே..
இது பற்றி இந்திய போட்டி ஆணையம் மேலும் கூறும் போது, ''ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரு நிறுவனங்களின் வர்த்தக மாதிரிகள் மறுபடுகின்றன. உயர்ந்த தரமான சாதனங்களை விற்பனை செய்வதில் ஆப்பிள் நிறுவனம் கவனம் செலுத்துகின்றது. ஆனால், கூகுள் நிறுவனம் தனது பயனாளர்கலின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது'' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications