Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாப்பாடு பரிமாற தாமதம்.. மணமகளுக்கு மாப்பிள்ளை கொடுத்த வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இருந்தாலும் கடலமுத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுபா என்பது போல்.. ஒரு சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், சந்தோலி மாவட்டத்தில் உறவினர்களுக்கு சாப்பாடு பரிமாற தாமதம் ஆனதால் கோபம் அடைந்த மணமகன் திருமணத்தையே நிறுத்திவிட்டார். மணமகளுக்கு பதில் வேறு ஒரு பெண்ணை மணந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் போலீசில் புகார் அளித்தார்.

உத்தரபிரதேச மாநிலம், சந்தோலி மாவட்டத்தில் உள்ள ஹமித்பூர் கிராமத்தில் மெஹ்தாப் என்ற இளைஞருடன் அந்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமணம் விழா கடந்த டிசம்பர் 22ம் தேதி மணமகள், மணமகனின் உறவினர்கள் சூழ உற்சாகமாக நடந்தது. அப்போது மணப்பெண்ணின் குடும்பத்தினர், மாப்பிள்ளை குடும்பத்திற்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர், பின்னர் அவர்களுக்கு உணவு பரிமாறினர். இருப்பினும், மணமகனின் உறவினர் ஒருவருக்கு ரொட்டி(உணவு) தாமதமாக வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தனக்கு உணவு தாமதமாக கிடைத்ததால் ஆத்திரம் அடைந்த மணமகனின் உறவினர் திருமண விழாவில் கூச்சலிட்டார். இதனால் திருமண வீடே களோபரம் ஆனது.

uttar pradesh marriage food

இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் குடும்பத்தினர், மணமகன் தரப்பைச் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் மணமகனின் உறவினர்களோ. மணமகளின் குடும்பத்தினரைக் குற்றம் சாட்டி பாதியிலேயே வெளியேறினார்கள். இதனிடையே விடிந்தால் திருமணம் என்கிற நிலையில். மணமகன் இரவில் காணாமல் போனார். சிறிது நேரத்திற்கு பிறகு உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு மண்டபத்திற்கு வந்தார்.

இந்த செய்தி மணமகளின் குடும்பத்தின் காதுக்கு போனது. இதை கேட்டு மணமகள் உள்பட அவரது குடும்பத்தினர் ஆடிப்போனார்கள்.. இதையடுத்து மணமகள் சார்பில் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களை கூறி புகார் அளித்தனர். ஆனால் மணமகளின் புகாரின் மீது காவல் நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து டிசம்பர் 24 அன்று சந்தோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மணமகள் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

அந்த புகாரில். மணமகன் வீட்டாருக்கு வரதட்சணையாக தரப்பப்பட்ட ரூ.1.5 லட்சம் உட்பட ரூ.7 லட்சம் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும், அதனை பெற்றுத்தர வேண்டும் என்றும் என்றும் திருமணம் செய்வதாக ஏமாற்றியது உள்பட பல்வேறு பிரிவின் கீழ் மணமகன் உள்பட 5 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மணமகள் சந்தோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்தார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறிய மணமகளின் சகோதரர் ராஜு, சந்தோலி மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுப்பதாக எங்களிடம் உறுதியளித்தார். காவலர்கள் நடவடிக்கை எடுக்குமாறு எஸ்பி உத்தரவிட்டுள்ளார். ஆனால் உள்ளூர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+