மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்குவீங்களா? மாட்டீங்களா?.... இதுக்கு அமைச்சர் ஹர்ஷ்வர்தனின் பதிலை பாருங்க!
டெல்லி: ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படும் தாமதத்தால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை தொடர முடியவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.
இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் இன்னும் தொடங்காதது ஏன்? என தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கேள்விக்கு ஹர்ஷ்வர்தன் பதில் அளித்துள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ்
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு, 2019 ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 1,264 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இந்த நிதியை, 'ஜிக்கா' எனும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிறுவனம், கடனாக அளிக்க இருக்கிறது.

பணிகள் தொடங்குவதில் தாமதம்
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 2 வருடம் ஆன போதிலும் இன்னும் பணிகள் தொடங்காதது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி கேட்டதில் இந்தியா - ஜப்பான் இடையே, இதற்கான கடன் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் தொடர்வதால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறியது.

தமிழக அரசு நிலம் அளிக்கவில்லை
மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு, 'இன்னும் மாநில அரசு நிலத்தை ஒப்படைக்கவில்லை' என, மத்திய அரசு தெரிவித்து இருந்தது. தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு நிலம் கொடுத்து விட்டதாகவும் விரைவில் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்து இருந்தது.

டி.ஆர்.பாலு கேள்வி
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் இன்னும் தொடங்காதது ஏன்? எய்ம்சுக்கு இதுவரை ரூ.12 கோடிதான் ஒதுக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசியதாவது:-

ஜப்பான் நிறுவன ஒப்பந்தம் தாமதம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படும் தாமதத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை தொடர முடியவில்லை. இது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

விரைவில் பணிகள் தொடங்கும்
இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமைக்கும் பணிகள் தொடங்கும். எய்ம்ஸ் அமைக்க ரூ.1,264 கோடி ஒதுக்கபட்டுள்ளது. இதுவரை ரூ.12 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications