டெல்லியில் ஓவரா குளிருது.. ஜெயிலில் அடம்பிடிக்கும் சைக்கோ கொலையாளி அப்தாப்..ஏடிஎம் கார்டும் வேணுமாம்
டெல்லி: நாட்டையே உலுக்கிய ஷ்ர்த்தா கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்தாப் அமீன் டெல்லி திகார் சிறையில் குளிர் வாட்டி வதைப்பதாகவும் குளிரை தாங்கும் வகையில் உடைகள் வாங்க தனக்கு கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகளை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தனது வக்கில் மூலமாக மனு தாக்கல் செய்துள்ளார்.
மகாராஷ்டிர மநிலம் வசாய் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஷ்ரத்தா வாக்கர். இவர் கடந்த ஆண்டு டெல்லியில் தனது காதலன் அப்தாப் அமீனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
டெல்லியில் லிவிங் டூகெதர் முறையில் வசித்து வந்த போது சண்டை ஏற்பட்டதால் அப்தாப் அமீன் ஷரத்தாவை கொடூரமாக கொலை செய்ததுடன் கொலையை மறைக்க அப்தாப் செய்தவை அனைத்தும் சினிமா கிரைம் திரில்லரை மிஞ்சும் வகையில் இருந்தது.

ஷ்ரத்தா கொலை வழக்கு
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை இந்த வழக்கு ஏற்படுத்தியது. அதாவது ஷ்ரத்தா உடலை 36 துண்டுகளாக வெட்டி உடலை புதிதாக வாங்கிய பிரிட்ஜில் வைத்திருந்து ஒவ்வொரு பாகங்களாக டெல்லி வனப்பகுதியில் வீசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சைக்கோ கொலையாளி போல அப்தாப் அமீன் நடந்து கொண்ட சம்பவம் டெல்லி போலீசாரையே திடுக்கிட வைக்கும் வகையில் இருந்தது. நாடும் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சிறையில் அடைக்கப்பட்ட அப்தாப்
ஷ்ரத்தாவின் உடலை வீட்டில் வைத்திருக்கும் போதே டேட்டிங் ஆப் மூலமாக பல பெண்களுடன் பழகி அவர்களை தனது வீட்டிற்கே அப்தாப் அழைத்து வந்ததோடு அவர்களுடன் ஜாலியாக இருந்த தகவலும் கேட்டு போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்தது. ஷ்ரத்தாவின் தந்தை அளித்த புகாருக்குப் பிறகு இந்த கொடூர கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த நவம்பர் 12 ஆம் தேதி கைதான அப்தாப், தற்போது நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அப்தாப் அமீனிடம் ஷர்த்தா கொலை வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

போர்வை, கம்பளி வாங்க..
இந்த நிலையில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அப்தாப், கடுமையான குளிரில் அவதிப்படுவதாகவும் குளிரை தாங்கக் கூடிய போர்வைகள் மற்றும் கம்பளிகள் வாங்குவதற்காக தனது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி டெல்லி மெட்ரோபோலிடன் மாஜிஸ்திரேட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்தாப் அமீனின் வழக்கறிஞர் எம்.எஸ். கான் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கிரெடிட் கார்டை வழங்க வேண்டும்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "அப்தாப் அமீன் டெல்லியில் நிலவும் கடும் குளிரால் அவதிப்படுகிறார். குளிரை தாங்க கூடிய போதிய உடைகள் அவரிடம் இல்லை. எனவே, அவசர தேவைகளுக்காகவும் தினசரி பயன்பாட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கும் பணம் தேவைப்படுகிறது. எனவே தற்போது போலீஸிடம் இருக்கும் அப்தாப் அமீனின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை அவரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். அப்தாப் அமீனின் குடும்பத்தினருடன் அவருடனான தொடர்பை துண்டித்துவிட்டதால் அவருக்கு பணம் கிடைக்க வேறு வழியில்லை" என்று தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

டி.என்.ஏ சோதனை முடிவுகள்
இதனிடையே, டெல்லியின் வனப்பகுதியில் இருந்து மீட்கபட்ட எலும்பு மற்றும் தலை முடி ஆகியவற்றை டி.என்.ஏ சோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்திருந்தனர். இந்த டி.என்.ஏ சோதனையில், டெல்லி வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட எலும்பு மற்றும் தலைமுடி உள்ளிட்டவைகள் ஷரத்தாவினுடையதுதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி டெல்லி போலீஸ் கூறுகையில், "ஷ்ரத்தா கொலை வழக்கில் டி.என்.ஏ சோதனை முடிவுகள் வந்துள்ளன. இதில் ஒரு எலும்பு மற்றும் தலைமுடி ஷ்ரத்தாவின் தந்தை , சகோதரரின் டி.என்.ஏவுடன் ஒத்துப்போகிறது: என்றனர். ஷர்த்தா கொலை வழக்கில் அப்தாப் அமீனுக்கு எதிராக முக்கிய தடயமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications