கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்பாதீர்... சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
டெல்லி: கொரோனா தடுப்பூசி குறித்தும் பரவும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் மாநிலங்களின் கருத்துகளை இணைத்தே வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.
ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு நேற்று அனுமதியளித்தது.
அதைத்தொடர்ந்து, நாட்டில் தடுப்பூசி அளிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒத்திகை
முன்னதாக, நாட்டில் நான்கு மாநிலங்களில் முதல்கட்டமாகக் கடந்த சில நாட்களுக்கு முன் தடுப்பூசி வழங்கும் ஒத்திகை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இன்று நாடு முழுவதும் இரண்டாம் ஒத்திகை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

பார்வையிட்ட ஹர்ஷ் வர்தன்
தலைநகர் டெல்லியில் ஜிடிபி மருத்துவமனை, வெங்கடேஸ்வரா மருத்துவமனை, தியாகர்கஞ்ச் ஆரம்பச் சுகாதார நிலையம் ஆகிய மூன்று இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடந்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காலை ஜிடிபி மருத்துவமனைக்கு நேரில் சென்று தடுப்பூசி ஒத்திகை பணிகளைப் பார்வையிட்டார்.

மிகவும் பாதுகாப்பானது
அதன் பின்னர் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "தடுப்பூசியின் பாதுகாப்பு தன்மை குறித்து எந்த வதந்திகளும் இருக்கக்கூடாது. அனைத்தும் மிக விரிவாகச் சரிபார்க்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் போலியோ தடுப்பு மருந்து உருட்டப்பட்டபோதும்கூட, அது குறித்து வதந்திகள் பரவின. ஆனால், போலியோ தடுப்பு மருந்தை மக்களுக்கு அளிக்கத் தொடங்கியதும், அதன் பாதுகாப்பு தன்மை குறித்து மக்கள் உணர்ந்தனர். அதோபோலதான், கொரோனா தடுப்பூசியும் மிகவும் பாதுகாப்பானது" என்றார்.

மாநிலங்களின் கருத்துகள்
தடுப்பூசி ஒத்திகை குறித்துப் பேசிய அவர், "முதலில் 4 மாநிலங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே இன்று நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படுகின்றன. உண்மையான தடுப்பூசி கொடுப்பதைத் தவிர, தடுப்பூசி வழங்கும் பணியில் இருக்கும் ஒவ்வொரு நடைமுறையும் இந்த ஒத்திகையில் முறையாகப் பின்பற்றப்படுகிறது" என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications