Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்படி போடு.. குட்நியூஸ்.. கேரளாவில் வீழ்ந்தது கொரோனா அலை.. நாடு முழுக்க குறையப்போகிறதாம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் சமீப காலங்களில் கொரோனா அதிகரிக்கும் நிலையில், வரும் காலத்தில் நாட்டில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

கடந்த 2019இல் ஆரம்பித்த கொரோனா, அதன் பிறகு உலக நாடுகளை வைத்துச் செய்துவிட்டது. சீனாவில் ஆரம்பித்த இந்த கொரோனா பாதிப்பு அமெரிக்கா தொடங்கி எந்தவொரு நாட்டையும் விட்டுவைக்கவில்லை.

How Coronavirus is behaving in Kerala and itll decrease across the nation

அதன் பிறகு கொரோனா வேக்சின், முன்னெச்சரிக்கை பணிகளுக்குப் பின்னரே கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வந்தது. உலகம் மாஸ்க்கை தவிர்த்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது.

கொரோனா பாதிப்பு: இதற்கிடையே கடந்த சில காலமாகவே இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 4,423இல் 4,334 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழப்புகள் என்று வரும் போது நமது நாட்டில் ஒரே நாளில் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகக் கேரளாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 4 பேரும் மகாராஷ்டிராவில் இரண்டு பேரும் உயிரிழந்தனர்.

உலக சுகாதார அமைப்பு: தற்போது இந்தியாவில் கொரோனா அதிகரிக்க புதிய ஜேஎன் 1 கொரோனா தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. உலக சுகாதார அமைப்பும் கூட இந்த வகை கொரோனாவை கவனிக்க வேண்டிய கொரோனாவாக பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 511 பேருக்கு ஜேஎன் 1 கொரோனா பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் அதிகபட்சமாக 199 ஜேஎன் 1 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்து கேரளாவில் 148 பேருக்கும் கோவாவில் 47 பேருக்கும் புதிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

BA.2.86 அல்லது பைரோலா என்ற ஓமிக்ரான் பாதிப்பே இந்த ஜேஎன் 1 வேரியண்ட்டாக உருமாறி உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் கடந்த செப். மாதம் இந்த புது வகை கொரோனா வகை கண்டறியப்பட்ட நிலையில், இப்போது உலகெங்கும் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரைக் கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

கேரளாவில் அதிகம்: கேரளாவைப் பொறுத்தவரைக் கடந்த டிச.10ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. மெல்ல வைரஸ் பாதிப்பு 100ஐ தொட்ட நிலையில், 12ஆம் தேதி 200ஐ தாண்டியது. அதேபோல டிச.16ஆம் தேதி வைரஸ் பாதிப்பு 300ஐ நெருங்கியது. அதிகபட்சமாக டிச. 22ஆம் தேதி வைரஸ் பாதிப்பு 600ஐ நெருங்கியது. இதனால் இந்தியாவில் எங்கு அடுத்து ஒரு கொரோனா அலை ஏற்படுமோ என்று பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

ஆனால், அதன் பிறகு வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. ஜன.3ஆம் தேதி கேரளாவில் வைரஸ் பாதிப்பு 200என்ற ரேஞ்சில் குறைந்துள்ளது. இதற்கிடையே கேரளாவில் வைரஸ் பாதிப்பு எப்படி பெரியளவில் அதிகரிக்கவில்லையே.. நாடு முழுக்கவும் அதேபோல வைரஸ் பாதிப்பு பெரியளவில் அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்று கோவிட் டேட்டா பகுப்பாளர் விஜயானந்த் தெரிவித்துள்ளார்.

இதுதான் நடக்கும்: இது குறித்து விஜயானந்த் தனது எக்ஸ் பக்கத்தில், "கேரளா கொரோனா கேஸ் டிரெண்டை பார்க்கும் போது, அது சரிந்து வருவது தெரிகிறது. கேரளாவில் தற்போது ஏற்பட்ட கொரோனா எழுச்சி அங்கே எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.. கேரளாவில் இப்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது, மற்ற மாநிலங்களிலும் இதே டிரெண்ட் தான் இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+