இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன்.. தமிழில் உறுதிமொழி வாசித்து எம்பி-யாக பதவியேற்ற வைகோ
Recommended Video

டெல்லி: தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்று எம்பி-க்களாக பதவியேற்று கொண்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் மைத்ரேயன், கே.ஆர். அர்ஜுனன், ஆர்.லட்சுமணன், டி.ரத்தினவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் நேற்றுடன் மாநிலங்களவை எம்பி பதவியில் இருந்து ஓய்வு பெற்றனர்

மேலும் மாநிலங்களவை எம்பி-யாக இருந்த கனிமொழி, மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கான 6 இடங்கள் காலியானது.
தமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், திமுக மற்றும் அதிமுக சார்பில் தலா 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
திமுக சார்பில் தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதிமுக சார்பில் முகமது ஜான், சந்திரசேகரன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களும் இன்று பதவியேற்றனர்.
முதலில் மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுக-வின் சந்திரசேகர், முகமது ஜான் பதவியேற்று கொண்டனர். பின்னர் திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சண்முகம் மாநிலங்களவை எம்பி-யாக பதவியேற்று கொண்டார்.
அதன் பின்னர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எம்பி-யாக உறுதிமொழி வாசித்து பதவியேற்று கொண்டார். இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன் என தமிழில் உறுதி கூறி மாநிலங்களவை எம்பி-யாக பதவியேற்றார் வைகோ
பின்னர் திமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பி.வில்சன் எம்பி-யாக பதவியேற்றார்.
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன












Click it and Unblock the Notifications