இலவச வேக்சின் என்றால்.. தனியாருக்கு மட்டும் கட்டணம் வசூலிக்க அனுமதி ஏன்?.. ராகுல் காந்தி பொளேர்!
டெல்லி: எல்லோருக்கும் இலவச வேக்சின் என்றால், தனியாருக்கு மட்டும் கட்டணம் வசூலிக்க அனுமதி ஏன்? என்று காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
மத்திய அரசின் கொரோனா வேக்சின் கொள்கை கடந்த சில வாரங்களாக கடும் விமர்சனங்களை சந்தித்து வந்தது. முக்கியமாக போதிய வேக்சின் ஆர்டர் செய்யாததும், மாநிலங்களுக்கு போதிய வேக்சின் வழங்காததும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நாடு முழுக்க எல்லோருக்கும் இலவச வேக்சின் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். கடந்த வருட இறுதியில் இருந்தே கூடுதல் வேக்சின் ஆர்டர் செய்ய வேண்டும், வேக்சின் மட்டுமே கொரோனாவை தடுக்கும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார்.

பேட்டி
சமீபத்தில் ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூட, கொரோனா தொற்று என்றால் என்ன என்பதே மத்திய அரசுக்கும் மோடிக்கும் புரியவில்லை. கொரோனாவை புரிந்து கொள்ள மத்திய அரசு தவறிவிட்டது. லாக்டவுன் தற்காலிக தீர்வு, வேக்சின் மட்டுமே நிரந்தர தீர்வு. மோடி காட்டிய "வித்தைகள்" காரணமாகவே இரண்டாம் அலை ஏற்பட்டது.

கொரோனா
இந்தியாவில் காட்டப்படும் கொரோனா பலி எண்ணிக்கை பொய். மத்திய அரசு உண்மையான எண்ணிக்கையை மறைத்துவிட்டது. இந்தியாவில் 3% மட்டும் வேக்சின் போட்டு 97% பேருக்கு வேக்சின் போடாமல் இருந்தால், அது பெரிய தவறாக முடியும். தடுப்பூசி உற்பத்தியில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம். ஆனாலும் மக்களுக்கு வேக்சின் கிடைக்கவில்லை, என்று குறிப்பிட்டு இருந்தார்.

பலி
இந்த நிலையில் தற்போது மத்திய அரசு வேக்சின் கொள்கையை மாற்றியுள்ளது. பிரதமர் மோடி நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக வேக்சின் கொடுப்பதாகவும், இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகிக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கேள்வி
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேக்சினில் 25% வேக்சினை தனியார் வாங்கிக்கொள்ளும். தனியார் மருத்துவமனைகள் தங்கள் வேக்சின் விற்பனையில் 150 ரூபாய் மட்டுமே சர்வீஸ் சார்ஜ் விதிக்க முடியும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது.

ஏன்
இந்த நிலையில்.. எல்லோருக்கும் இலவச வேக்சின் என்றால், தனியாருக்கு மட்டும் கட்டணம் வசூலிக்க அனுமதி ஏன்? என்று காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். எனக்கு ஒரு கேள்வி.. வேக்சின் இலவசம் என்றால் ஏன் தனியார் மட்டும் கட்டணம் வசூலிக்கிறது என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications