Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'இதை மட்டும் செய்யாவிட்டால்' பாஜகவுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டம்.. அன்னா ஹசாரே குழு வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அன்னா ஹசாரே டீம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் கொண்டு வரக்கோரி கடந்த 2011 ஆம் ஆண்டு அண்ணா ஹசாரவே மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுத்தார்.

'ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற பெயரில் நடைபெற்ற போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் ஆதரவு கிடைத்தது.

பிரதமர் மோடிக்கு கடிதம்

பிரதமர் மோடிக்கு கடிதம்

தற்போது டெல்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி உள்ளிட்ட பலரும் அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு துணையாக இருந்தனர். மத்தியில் அப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட அன்னா ஹசாரேவின் போராட்டமும் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்பட்டது. அதன்பிறகு பெரிதாக போராட்டங்கள் எதையும் முன்னெடுக்காத அன்னா ஹசாரே, பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் மட்டும் எழுதி வருகிறார்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள்

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள்

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி 2014 ஆம் ஆண்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால் மிகப்பெரும் போராட்டத்தை அன்னா ஹசாரே குழு முன்னெடுக்கும் என்று அவரது செயலர் கல்பனா இனாம்தார் அறிவித்துள்ளார். தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி பிடித்துள்ள போதிலும் பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் விமர்சித்து கல்பனா இனாம்தார் தெரிவித்தார்.

ராஷ்ட்ரிய கிஷான் மன்ச்

ராஷ்ட்ரிய கிஷான் மன்ச்

டெல்லியில் ராஷ்ட்ரிய கிஷான் மன்ச் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய கல்பனா இனாம்தார் இந்த தகவலை தெரிவித்தார். தனது பேட்டியின் போது அவர் மேலும் கூறியதாவது:- ஊழல் மற்றும் சமத்துவமின்மை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் அன்னா ஹசரேவிற்கு 2011 ஆம் ஆண்டு ஆதரவு அளித்தனர். இதன் விளைவாகவே காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பாஜக ஆட்சியில் அமர்ந்தது.

பலமுறை கடிதங்கள் எழுதிய நிலையிலும்

பலமுறை கடிதங்கள் எழுதிய நிலையிலும்

ஆனால், பாஜகவின் கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் கிராமப்புற பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. நாட்டில் ஊழல் பெருகிவிட்டது. கிராமப்புறங்களில் உள்ள வளங்களை தொழில் அதிபர்கள் சுரண்டுகின்றனர். ஆனால், அரசு மவுனம் காக்கிறது. அன்னா ஹசாரே பலமுறை கடிதங்கள் எழுதிய நிலையிலும், வாக்குறுதி அளித்தபடி திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்காதது புரிந்து கொள்ளும் படியாக இல்லை.

பாஜகவை அகற்றும்

பாஜகவை அகற்றும்

தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அன்னா ஹசாரே குழு மீண்டும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி பாஜக அரசாங்கத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும்" என்றார். இதையடுத்து பேட்டி அளித்த ராஷ்டிரிய கிஷன் மன்ச் தலைவர் ஷேகர் திகிஷித், மக்களை மத அடிப்படையில் பிரித்து வாக்குகளை பெறுவது எளிது என்றும் அதே மக்களுக்காக களத்தில் பணியாற்றுவது பாஜகவின் அறிவுக்கு அப்பாற்பட்டது எனவும் சாடினார். மேலும் நாட்டில் உள்ள விவசாயிகளும் இளைஞர்களும் விரக்தி அடைந்துள்ளதாகவும் விமர்சித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+