தலைநகரில் மாநில அரசின் அதிகாரம் குறைப்பு.. மத்திய அரசுக்கு கூடுதல் பவர்.. புதிய சட்ட திருத்தம்
டெல்லி: தலைநகரில் மாநில அரசைக் காட்டிலும் மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் தரும் புதிய மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. 70 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 67 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.

தலைநகர் டெல்லியில் மாநில அரசுக்கு அதிக அதிகாரமா அல்லது மத்திய அரசுக்கு அதிக அதிகாரமா என்பதில் இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கிலும், போலீஸ, சட்ட ஒழுங்கு தவிர மற்ற விஷயங்களில் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் டெல்லி அரசுக்குத் தேவையில்லை என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில், தேசிய தலைநகர் டெல்லி அரசு திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா டெல்லியில் மாநில அரசு மற்றும் துணைநிலை ஆளுநருக்கு என்ன அதிகாரம் என்பதைத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாறாக இந்த புதிய சட்டத்தில் டெல்லி அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கும் முன்பு துணை நிலை ஆளுநரின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் டெல்லி அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் உள்ளதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தச் சட்டம் தேர்தலில் தோற்ற பாஜகவுக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் இருப்பதாகவும் இது டெல்லிவாசிகளுக்கு பெரும் அவமானம் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
தற்போது மக்களைவில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா விரைவில் மாநிலங்களவைக்கும் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications