மத்திய அரசு நிறுவனத்தை முந்திய ஜியோ நிறுவனம்.. வரலாற்றில் இதுவே முதல்முறை! பிஎஸ்என்எல் பரிதாபம்
டெல்லி: 22 ஆண்டுகளாக மேலாக வயர்லைன் சேவையை வழங்கி வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ பின்னுக்கு தள்ளி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ முன்னேறி இருக்கிறது.
மத்திய அரசின் தொலைதொடர்புத் துறையால் நடத்தப்பட்டு வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளால வயர்லைன் சேவையை நாடு முழுவதும் வழங்கி வருகிறது.
அலுவலகங்கள், வீடுகள் என அனைத்திலும் பிஎஸ்என்எல் இணைப்பு இருந்த காலம் மாறி 4ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பிஎஸ்என்எல் பின்னடைவை சந்தித்து வருகிறது.

4ஜி இணைப்பு
அதிகவேக இணையதள சேவை, தொலைக்காட்சி கேபிள் இணைப்பு, லேண்ட் லைன் என அனைத்து சேவைகளையும் மொத்தமாக வழங்க ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வந்தன. அதே நேரம் அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி இணைப்பு தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட பல ஆண்டுகளுக்கு பிறகே வழங்கப்பட்டன.

வயர்லேன் சேவை
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஜியோ நிறுவனம் செல்போன் மட்டுமின்றி, இணையதளம், வயர் லைன் சேவைகளையும் வழங்கி வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்க்கத் தொடங்கியது. கவர்ச்சிகரமான திட்டங்களால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஜியோவை நோக்கி சென்றனர்.

டிராய் தரவரிசை
இந்த நிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வயர்லைன் இணைப்புகளை அதிகம் கொண்டுள்ள நிறுவனங்களின் வரிசையை வெளியிட்டு இருக்கிறது. அதில், சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் முதலிடத்திலிருந்து இரண்டாம் இடத்துக்கு சரிந்துள்ளது.

பின்னுக்கு சென்ற பிஎஸ்என்எல்
73.5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் 71.3 லட்சம் வாடிக்கையாளர்களுடன் 2 வது இடத்துக்கு சரிவடைந்து உள்ளது. 62 லட்சம் வாடிக்கையாளர்களை தன்வசம் வைத்திருக்கும் பாரதி ஏர்டெல் நிறுவனம் இதில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

3 ஆண்டுகள்
22 ஆண்டுகளாக வயர்லைன் சேவையை வழங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ 3 ஆண்டுகளுக்கு முன் வயர்லைன் சேவையை தொடங்கிய ஜியோ பின்னுக்கு தள்ளி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் இதன் தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2.59 கோடியில் இருந்து தற்போது 2.59 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications