அமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்
ஈரான் - அமெரிக்கா இடையில் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக நிலவி வரும் பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
டெல்லி: ஈரான் - அமெரிக்கா இடையில் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக நிலவி வரும் பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையில் நிகழ்ந்து வரும் பிரச்சனை உலக நாடுகளுக்கு இடையிலான சண்டையாக உருவெடுத்துள்ளது. விரைவில் இது உலகப் போராட் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் டிரோன் தாக்குதல் நிகழ்த்திய அமெரிக்கா ஈரான் குவாட்ஸ் படை தளபதி சுலைமானியை கொலை செய்தது. இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் 12 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில்தான் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவீத் ஷரீப் இந்தியா வருகை புரிந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை ஜாவீத் ஷரீப் சந்தித்தார். ஈரான் அமெரிக்கா இடையே சண்டை குறித்து இவர்கள் பேசினார்கள்.

கருத்து
இந்த நிலையில் அமெரிக்கா ஈரான் இடையிலான உறவு குறித்து ஜாவீத் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஈரானில் இருந்து கடல் வழி போக்குவரத்து மேற்கொள்வதில் இந்தியா சில சிரமங்களை சந்தித்து வருகிறது. சாபாஹர் துறைமுகத்தில் இருந்து இந்தியா பொருட்களை பெறுவதில் சில சிரமங்கள் நிலவி வருகிறது.

காரணம்
அமெரிக்காவில் பொருளாதார தடை காரணமாக இந்த பிரச்சனை நிலவி வருகிறது. விரைவில் இது சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். ஈரானின் வளர்ச்சியில் இந்தியா அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.

என்ன நண்பன்
இந்தியா அமெரிக்காவிற்கு நல்ல நண்பனாக இருக்கிறது. அதேபோல் ஈரானுடனும் இந்தியா நல்ல உறவை கடைப்பிடித்து வருகிறது. ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை குறித்து இந்தியா பேச வேண்டும்.

இந்தியா உதவும்
அணு ஆயுத ஒப்பந்தம் குறித்தும், மீண்டும் அமெரிக்காவின் அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரானை இணைப்பது குறித்தும் இந்தியா பேச வேண்டும். அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்தியாவின் செயல் இதில் அதிக கவனம் பெறும் என்று ஜாவீத் கருத்து தெரிவித்துள்ளார்.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications