வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றி வருகிறார்.
உலகத் தலைவர்கள் அனைவரும் ஐ.நா பொதுசபை கூட்டத்திற்கு தங்கள் உரையை வீடியோ வடிவில் அனுப்பியுள்ளனர். பிரதமர் மோடியும் தனது பேச்சு வீடியோவை அனுப்பியுள்ளார். இந்த உரை இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக துவங்கியுள்ளது.
Sep 26, 2020, 6:59 pm IST
தீவிரவாதம், சட்டவிரோத ஆயுதங்கள் கடத்தல், போதைப்பொருள் மற்றும் பணமோசடிக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது.
150 நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் கொரோனா தொடர்பான மருந்துகளை அனுப்பியுள்ளோம்- ஐ.நா.வில் மோடி உரை.
ஐ.நா.சபையில் மோடியின் உரை நிறைவடைந்தது.
Sep 26, 2020, 6:54 pm IST
இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் தடுப்பூசி விநியோக திறன் கொரோனா நெருக்கடியிலிருந்து காப்பாற்றும்.
ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் கொரோனாவிலிருந்து வெளியேற்ற இந்தியா உதவும்- ஐ.நா.சபையில் மோடி பேச்சு.
Sep 26, 2020, 6:45 pm IST
காலத்திற்கு ஏற்ப ஐ.நா.சபையின் நடவடிக்கையில் மாற்றம் தேவைப்படுகிறது- மோடி கோரிக்கை.
ஐ.நா சபை சீர்திருத்தங்களுக்காக இந்திய மக்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள்- மோடி.
Sep 26, 2020, 6:40 pm IST
கடந்த 8 முதல் 9 மாதங்களாக, உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிறது.
தொற்றுநோய்க்கு எதிரான இந்த கூட்டுப் போராட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை எங்கே இருக்கிறது?.
மூன்றாம் உலகப் போர் தவிர்க்கப்பட்டாலும், பல போர்களும் உள்நாட்டுப் போர்கள் நடந்துள்ளதே- மோடி கேள்வி.
பல பயங்கரவாத தாக்குதல்கள் உலகை உலுக்கியுள்ளதே- மோடி குற்றச்சாட்டு.
Sep 26, 2020, 6:38 pm IST
ஐக்கிய நாடுகள் சபையின் 75வது கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்- மோடி
Sep 26, 2020, 6:36 pm IST
ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒன்று இந்தியா என்பதில் பெருமிதம் கொள்கிறோம்- மோடி பேச்சு.
இந்த வரலாற்று சந்தர்ப்பத்தில், இந்தியாவின் 1.3 பில்லியன் மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
Sep 26, 2020, 6:33 pm IST
ஐ.நா.சபையில் பிரதமர் நரேந்திர மோடி உரை ஆரம்பம்.
வீடியோ மூலமாக மோடி உரையாற்றி வருகிறார்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா செய்த உதவிகளை பிரதமர் பேசுவார் என எதிர்பார்ப்பு
Sep 26, 2020, 6:09 pm IST
ஐ.நா.வில் பிரதமர் மோடியின் உரை 21 நிமிடங்கள் நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
Sep 26, 2020, 5:15 pm IST
ஐ.நா.சபையில் இன்று பாகிஸ்தானின் தீவிரவாதிகள் ஆதரவு நடவடிக்கை பற்றி மோடி பேச வாய்ப்பு
Sep 26, 2020, 4:32 pm IST
பிரதமர் மோடி தனது உரையில், உலக வெப்பமயமாதல், தீவிரவாத பிரச்சினை பற்றி பேச வாய்ப்பு உள்ளது
Sep 26, 2020, 4:31 pm IST
இம்ரான் கான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பிரதிநிதி மிஜிடோ வினிடோ ஐநா சபை கூட்டத்தில் இருந்து வெளியேறினார்
Sep 26, 2020, 4:31 pm IST
ஐநா பொதுசபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தைப் பற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று பேசினார்.
Sep 23, 2020, 8:07 am IST
மற்ற நாடுகளுடனான கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் சீனா குறைக்கும் என பேச்சு.
நாட்டு எல்லைகளை விரிவுபடுத்த சீனா ஒரு போதும் முயற்சி செய்யாது: ஜி ஜின் பிங் பேச்சு.
Sep 23, 2020, 8:05 am IST
பிறநாடுகள் மீது அதிகாரம் செலுத்த சீனா விரும்பவில்லை: அதிபர் ஜி ஜின் பிங் பேச்சு.
ஐநா சபையின் 75ம் ஆண்டு நாள் கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜின் பிங் பேச்சு.
Sep 23, 2020, 6:55 am IST
அக்டோபருக்குள் படைகளை வாபஸ் பெற வேண்டும்: இந்தியா- சீனா ஒப்புதல்.
லடாக்கில் பதற்றத்தை தணிக்க 14 மணி நேரம் நீடித்த 6ம் கட்ட பேச்சுவார்த்தை.
Sep 22, 2020, 10:39 pm IST
எல்லையில் கூடுதல் படைகள் அனுப்புவது நிறுத்தப்படும் - இந்தியா-சீனா கூட்டறிக்கை வெளியீடு.
எல்லை பகுதியில் சூழ்நிலையை மாற்றும் போக்கை கைவிட வேண்டும்.
நிலைமையை சிக்கலாக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும்
Sep 22, 2020, 10:03 pm IST
இந்தியா சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்.
இந்தியா சீனா ராணுவ அதிகாரிகளின் 6 வது கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டறிக்கை.
எல்லை பதற்றத்தை தணிக்க இந்தியா சீனா ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை.
இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் 7வது கட்ட பேச்சுவார்த்தை நடத்த முடிவு
Sep 22, 2020, 9:35 pm IST
எந்த ஒரு நாட்டுடனும் சண்டையிட விரும்பவில்லை - சீன அதிபர் ஜீ ஜின்பிங்.
அமைதியான, பொதுவான வளர்ச்சிக்கு சீனா உறுதி பூண்டுள்ளது - சீன அதிபர்.
ஐக்கிய நாடுகள் சபையில் 75வது பொதுக்கூட்டத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் உரை.
பிற நாடுகளுடனான பிரச்சினைகளை பேசி தீர்வு காண்போம் - சீன அதிபர்
Sep 22, 2020, 10:52 am IST
இந்தியா சீனா இடையே ராணுவ மட்டத்திலான 13 மணி நேர பேச்சுவார்த்தை.
படைகளை வாபஸ் பெறுங்கள் சீனாவுக்கு இந்தியா அழுத்தம்.
Sep 21, 2020, 8:27 pm IST
சீனாவுக்கு பதிலடி தர தூத்துக்குடி துறைமுகத்தை சர்வதேச சரக்கு பெட்டக பரிமாற்ற முனையமாக்குக- கனிமொழி
Sep 21, 2020, 8:35 am IST
3 வாரங்களில் 6 முக்கிய மலைகளை இந்தியா கைப்பற்றியது- அறிக்கையில் தகவல்.
இந்திய சீன எல்லை பிரச்சினைக்கு இடையே செயலற்று கிடந்த 6 முக்கிய மலைகளை கைப்பற்றியது இந்தியா.
Sep 21, 2020, 6:52 am IST
இந்தியா- சீனா இடையே இன்று ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை.
இந்தியா-சீனா 6-வது கார்ப்ஸ் கமாண்டர்-லெவல் சந்திப்பு இன்று நடைபெற உள்ளது.
Sep 21, 2020, 12:10 am IST
இந்தியா-சீனா இடையே ராணுவ மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை.
இந்தியா-சீனா ஆறாவது கார்ப்ஸ் கமாண்டர்-லெவல் சந்திப்பு இன்று நடைபெற உள்ளது
Sep 20, 2020, 7:33 am IST
அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடைவிதிக்கும் முடிவு ஒரு வாரத்திற்கு ஒத்தி வைப்பு.
டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்க டிரம்ப் காலக்கெடு விதிப்பு.
திடீர் திருப்பமாக டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதித்த தடை ஒரு வாரத்திற்கு தடைவிதிப்பு.
Sep 20, 2020, 6:48 am IST
டிக் டாக் செயலிக்கு தடை- அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்.
இந்தியா- சீனா எல்லையில் மோதல் தொடர்பாக இந்தியாவில் 106 செயலிகளுக்கு தடை.
இந்தியாவை போல அமெரிக்காவிலும் டிக்டாக் மற்றும் வீ சாட்டை தடை செய்ய கோரிக்கை.
அமெரிக்காவின் இந்த தடை நடவடிக்கையை சீனா உறுதியாக எதிர்க்கிறது.
சீன நிறுவனங்களின் நலனை பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளை எடுக்கத் தயார்.
Sep 19, 2020, 6:21 am IST
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லையில் பதற்றத்தை தணிக்க ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை.
பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களில் லடாக்கில் துவங்குகிறது.
சீனா தலைமையில் நடந்த சிஎஸ்ஜி கூட்டத்தில் நேற்று முடிவு.
அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டனர்.
Sep 19, 2020, 6:16 am IST
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லையில் பதற்றத்தை தணிக்க ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை.
பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களில் லடாக்கில் துவங்குகிறது.
சீனா தலைமையில் நடந்த சிஎஸ்ஜி கூட்டத்தில் நேற்று முடிவு.
அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டனர்.
Sep 18, 2020, 6:10 am IST
கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் சீன வீரர்கள் பலியானது உண்மைதான்.
சீன வீரர்கள் கொல்லப்பட்டது உண்மை- இந்தியா சொல்லும் எண்ணிக்கையைவிட குறைவு.
சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் கால்வன் மோதல் குறித்து தலையங்கம்.
இந்திய ராணுவத்திடம் சீன வீரர்கள் ஒருவர்கூட சரணடையவில்லை.
இந்திய வீரர்கள் மலைகளில் இருந்து உருண்டும் ஆறுகளில் விழுந்தும் மரணித்தனர்- குளோபல் டைம்ஸ்.
இந்திய வீரர்கள் சீனா ராணுவத்திடம் சரணடைந்தனர்.
Sep 18, 2020, 6:09 am IST
எல்லைகளில் இந்தியாவின் ரோந்து பணிகளை தடுக்க உலகில் எந்த சக்தியாலும் முடியாது: ராஜ்நாத்சிங்
READ MORE
3:24 PM, 16 Jun
ராணுவ தளபதி பயணம்
இந்திய ராணுவ தளபதி நரவனேவின், பதன்கோட் பயணம் திடீர் ரத்து.. சீனாவுடனான எல்லை மோதலால் நடவடிக்கை
3:24 PM, 16 Jun
வீடியோ கான்பரன்ஸ்
எல்லை பிரச்சினை குறித்து, பிரதமர் நரேந்திர மோடியுடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
4:59 PM, 16 Jun
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கிறேன்.
நாட்டிற்காக இன்னுயிர் ஈந்த 3 ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு வீர வணக்கம் -மு.க.ஸ்டாலின்.
4:59 PM, 16 Jun
சீனாவின் கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி.
தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு இரங்கல் - டிடிவி தினகரன்.
4:59 PM, 16 Jun
சீன ராணுவம் தாக்கியதில் தமிழக வீரர் பழனி உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது.
வீரமரணம் எய்திய ராணுவ வீரர் பழனி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் -முதல்வர்
5:50 PM, 16 Jun
உலகத்தின் கவனத்தைத் திசைதிருப்ப எல்லையில் சீனா தாக்குதல்-நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த பழநி: வைகோ புகழஞ்சலி
6:03 PM, 16 Jun
சீனா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ20 லட்சம் நிதி உதவி.
வீரர் பழனியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணி- முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.
6:43 PM, 16 Jun
வீரர் பழனியின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம்- கமல்ஹாசன்
எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம். அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம்.
இந்திய ராணுவ வீரர்களின் உயிரிழப்பால் ஏற்பட்ட வலியை விவரிக்க முடியவில்லை- ராகுல் காந்தி
8:11 PM, 16 Jun
ராணுவ வீரர் பழனி வீரமரணம்- சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல்
I offer my sincere condolences to the family of Havildar Palani who lost his life in face-off with Chinese troops in the #Galwan Valley.Hailing from Ramanathapuram Dt & serving in the Indian Army for 22 years,he has given his life for the nation.I Salute his bravery & sacrifice. pic.twitter.com/trCAubFNtv
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) June 16, 2020
8:26 PM, 16 Jun
இந்திய- சீனா எல்லை மோதல் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம்.
எல்லையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன.
எல்லையில் தற்போதைய நிலையை சீனா ஒருதலைபட்சமாக மாற்றி அமைக்க முயற்சித்தது.
சீனாவின் நடவடிக்கையால் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன- வெளியுறவு அமைச்சகம்.
இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக இருக்கும்-வெளியுறவு அமைச்சகம்.
9:44 PM, 16 Jun
சீனா ஊடுருவல் குறித்து பிரதமர் மோடி மவுனம்- ப. சிதம்பரம் கண்டனம்
சீனத் துருப்புகள் இந்திய நிலப்பரப்பில் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியப் பிரதமர் இது வரை வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை
இது போன்று வாய் திறக்காத பிரதமரோ ஜனாதிபதியோ உலகில் வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா?
லடாக் எல்லையில் சீனாவின் தாக்குதலில் குறைந்தது 20 இந்திய வீரர்கள் வீரமரணம் - ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம். சீனாவின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்- ஏ.என்.ஐ.
10:03 PM, 16 Jun
இந்தியாவின் தாக்குதலில் 43 சீனா ராணுவ வீரர்கள் பலி- பலர் படுகாயம் என தகவல்
10:32 PM, 16 Jun
சீனாவின் தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 17 ராணுவ வீரர்கள் வீர மரணம்: இந்திய ராணுவம். லடாக் கால்வன் பள்ளத்தாக்கில் சீனா தாக்குதலில் மொத்தம் 20 இந்திய வீரர்கள் வீர மரணம்- ராணுவம்
11:10 PM, 16 Jun
மாவீரர்களுக்கு வீர வணக்கம் - ரவிக்குமார் எம்.பி. லடாக்கில் 20 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தது உண்மையென்றால் அவர்களது விவரங்களை அரசு வெளியிடவேண்டும். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த அந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் !
லடாக்கில் 20 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தது உண்மையென்றால் அவர்களது விவரங்களை அரசு வெளியிடவேண்டும். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த அந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் !
சீன கம்பனிக்கு ₹1800 கோடி ஒப்பந்தம்- பீட்டர் அல்போன்ஸ். நமது எல்லையில் நமது வீரர்களை சீன இராணுவத்தினர் கொலை செய்யும்போது சீன கம்பனிக்கு ₹1800 கோடி ஒப்பந்தத்தை மோடி அரசு ஜூன் 13 அன்று எப்படி கொடுத்தது? இந்திய நிறுவனங்கள் டாட்டா, எல் & டி போன்றவைகளுக்கு கொடுக்காமல் சீனாவை ஆதரிப்பது எப்படி? இதுதான் தட்சார்பு பொருளாதாரம்!- காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் எம்.பி.
நமது எல்லையில் நமது வீரர்களை சீன இராணுவத்தினர் கொலை செய்யும்போது சீன கம்பனிக்கு ₹1800 கோடி ஒப்பந்தத்தை மோடி அரசு ஜூன் 13 அன்று எப்படி கொடுத்தது? இந்திய நிறுவனங்கள் டாட்டா, எல் & டி போன்றவைகளுக்கு கொடுக்காமல் சீனாவை ஆதரிப்பது எப்படி? இதுதான் தட்சார்பு பொருளாதாரம்!
தேசத்துக்காக என் மகன் உயிரை தியாகம் செய்ததை பெருமையாக நினைக்கிறேன்.. அதிகாரி சந்தோஷ்பாபுவின் தாய் உருக்கம்
11:54 PM, 16 Jun
இந்தியா- சீனா இடையே மோதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை. இந்தியாவும் சீனாவும் பொறுமையை கடைபிடிக்க ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்
10:22 AM, 17 Jun
சீனாவின் தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் இறந்தது குறித்து ராகுல் காந்தி கருத்து.
நமது வீரர்களை கொல்வதற்கும், நிலத்தை அபகரிக்கவும் சீனாவுக்கு என்ன தைரியம்.
பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்: ராகுல் காந்தி.
பிரதமர் நரேந்திர மோடி எதை மறைக்கிறார், என்ன நடந்தது என்பது தெரிய வேண்டும்: ராகுல் காந்தி.
10:24 AM, 17 Jun
லடாக்: இந்திய வீரர்கள் 4 பேர் உடல் மோசமான நிலையில் இருக்கிறது.
சீனா இந்தியா இடையிலான லடாக் மோதலில் 20 இந்திய வீரர்கள் நேற்று வீர மரணம்.
காயம் அடைந்த 4 வீரர்களின் உடல் கவலைக்கிடம்.
10:35 AM, 17 Jun
முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் மோடியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இன்றைய ஆலோசனையில் பங்கேற்பதாக தகவல்.
11:05 AM, 17 Jun
லடாக் மோதலில் சீன ராணுவத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல்
11:05 AM, 17 Jun
அகமதாபாத்தின் பாபு நகரில் பொது மக்கள் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் புகைப்படங்களை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனி உடல் இன்று சொந்த ஊர் வருகிறது.
வீரர் பழனி குடும்பத்திற்கு ராமநாதபுரம் கலெக்டர் நேரில் ஆறுதல்.
12:43 PM, 17 Jun
இந்திய வீரர்களின் தியாகத்தை எப்போதும் நாங்கள் மறக்க மாட்டோம் - பாதுகாப்பு துறை அமைச்சர்.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிவிட்.
எல்லையில் இந்திய வீரர்களின் உயிர் இழப்பு ஆழ்ந்த மன உளைச்சலையும் வேதனையையும் தருகிறது - ராஜ்நாத் சிங்.
நமது வீரர்கள் தைரியத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தினர்.
இந்திய இராணுவத்தின் மிக உயர்ந்த மரபுகளை அவர்கள் கடைபிடித்தனர்.
மிகவும் தைரியமாக அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர் -ராஜ்நாத் சிங்.
1:15 PM, 17 Jun
லடாக் எல்லையில், வீரர்களை இழந்தது மிகவும் கவலையளிக்கிறது, வேதனையளிக்கிறது- ராஜ்நாத்சிங்.
நமது வீரர்கள் முன்மாதிரியான தைரியத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தினர்- ராஜ்நாத்சிங்.
1:20 PM, 17 Jun
கல்வான் பள்ளத்தாக்கின் இறையாண்மை எப்போதும் சீனாவுக்கு சொந்தம்- சீன வெளியுறவு அமைச்சகம்.
மேலும் மோதல்களைக் காண நாங்கள் விரும்பவில்லை- சீன வெளியுறவு அமைச்சகம்.
பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவுடன் தீர்வு காண விரும்புகிறோம் என்றும் அறிவிப்பு.
1:32 PM, 17 Jun
இந்தியா சீனா எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்க 19ம் தேதி மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
3:28 PM, 17 Jun
இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் சக்தி கொண்ட நாடு.
இந்தியாவிற்கு அமைதி முக்கியம், ஆனால் நாங்கள் தாக்கப்பட்டால் பதிலடி கொடுப்போம் - மோடி.