இந்தியாவில் 3-வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைவு- 24 மணிநேரத்தில் 6,660 பேருக்கு தொற்று!
டெல்லி: இந்தியாவில் 3-வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 6,660 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த வாரம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,000-த்தை தாண்டியதாக பதிவாகி இருந்தது. கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்தியாவில் நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 9,011 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டனர். மேலும் 7,178 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. தினசரி பாதிப்பு விகிதம் 9.16% வாராந்திர பாதிப்பு விகிதம் 5.41% இதுவரை மொத்தம் 92.54 கோடி சோதனைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை வரை 78,342 சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தியாவில் நேற்று ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 65,683 பேர்.
இந்த நிலையில் இன்று 3-வது நாளாக இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று காலையுடனான 24 மணிநேரத்தில் 6,660 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியானது. நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இன்று ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 63,380.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 24 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,31,369.












Click it and Unblock the Notifications