ஈரானில் தீவிரமடையும் தாக்குதல்.. ஆபரேஷன் 'சிந்து' நடவடிக்கை மூலம் மாணவர்களை மீட்கிறது இந்தியா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஈரான்-இஸ்ரேல் போர் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு 'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின் மூலம் மீட்டு வருகிறது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் குறிப்பில், "ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் மோதலால் நிலைமை மோசமடைந்து வருவதால், ஈரானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்காக, மத்திய அரசு கடந்த பல நாட்களாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Iran students Middle East

முதற்கட்டமாக, இந்தியத் தூதரகம் வடக்கு ஈரானில் இருந்து 110 இந்திய மாணவர்களை வெளியேற்றியுள்ளது. அவர்கள் ஜூன் 17ம் தேதி அர்மீனியாவுக்குப் பாதுகாப்பாகச் செல்ல உதவி செய்தது. இந்த மாணவர்கள், ஈரானில் உள்ள நம்முடைய தூதரகங்கள் மற்றும் அர்மீனியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மேற்பார்வையின் கீழ், சாலை வழியாக அர்மீனியத் தலைநகர் யெரெவானுக்குப் பயணம் செய்தனர்.

இந்த மாணவர்கள் ஜூன் 18 அன்று 14:55 மணிக்கு ஒரு சிறப்பு விமானத்தில் யெரெவானிலிருந்து புறப்பட்டனர். "ஆபரேஷன் சிந்து"வின் ஆரம்ப கட்டமாக, ஜூன் 19ம் தேதி அதாவது நாளை அதிகாலையில் புது டெல்லியை வந்தடைவார்கள். இந்த வெளியேற்றும் நடவடிக்கைக்குச் சீரான ஒத்துழைப்பு வழங்கிய ஈரான் மற்றும் அர்மீனியா அரசுகளுக்கு இந்திய அரசு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

வெளிநாடுகளில் உள்ள இந்தியக் குடிமக்களின் பாதுகாப்புக்கு இந்தியா அதிக முன்னுரிமை அளிக்கிறது. 'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம், அதிகமான மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான இந்தியக் குடிமக்களை நகர்த்தவும், பின்னர் அவர்களை வெளியேற்றவும் உதவி செய்து வருகிறது.

ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள், தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அவசர உதவி எண் மூலமாகவும், புது டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள 24x7 கட்டுப்பாட்டு அறையுடனும் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அவசர உதவி எண்கள்:

i. அழைப்புகளுக்கு மட்டும்: +98 9128109115, +98 9128109109
ii. வாட்ஸ்அப்பிற்கு: +98 901044557, +98 9015993320, +91 8086871709
iii. பந்தர் அப்பாஸ்: +98 9177699036
iv. சஹேதான்: +98 9396356649
v. மின்னஞ்சல்: [email protected]

புது டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள 24 X 7 கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள்: 800118797 (கட்டணமில்லா அழைப்பு), +91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905 வாட்ஸ்அப்: +91-9968291988; மின்னஞ்சல்: [email protected]" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+