உலக அளவில் 1 லட்சம் பேருக்கு 4.1 கொரோனா நோயாளிகள் மரண விகிதம் - இந்தியாவில் 0.2மட்டுமே!
டெல்லி: உலக அளவில் 1 லட்சம் பேருக்கு சராசரியாக 4.1 என்ற அளவில் கொரோனா நோயாளிகள் மரண விகிதம் உள்ள நிலையில் இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு மரண விகிதம் சுமார் 0.2 என்ற அளவில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

| நாடுகள் | மரணங்கள் | ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மரண விகிதம் |
| உலக அளவில் | 3,11,847 | 4.1 |
| அமெரிக்கா | 87180 | 26.6 |
| பிரிட்டன் | 34636 | 52.1 |
| இத்தாலி | 31908 | 52.8 |
| பிரான்ஸ் | 28059 | 41.9 |
| ஸ்பெயின் | 27650 | 59.2 |
| பிரேசில் | 15633 | 7.5 |
| பெல்ஜியம் | 9052 | 79.3 |
| ஜெர்மனி | 7935 | 9.6 |
| ஈரான் | 6988 | 8.5 |
| கனடா | 5702 | 15.4 |
| நெதர்லாந்து | 5680 | 33.0 |
| மெக்சிகோ | 5045 | 4.0 |
| சீனா | 4645 | 0.3 |
| துருக்கி | 4140 | 5.0 |
| ஸ்வீடன் | 3679 | 36.1 |
| இந்தியா | 3163 | 0.2 |
2020 மே 19 வரையிலான தகவல்.
உரிய சமயத்தில் நோயாளிகளைக் கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த காரணத்தால், ஒப்பீட்டளவில் மரண விகிதங்கள் குறைவாக உள்ளன. நேற்று நாட்டில் மிக உயர்ந்தபட்ச எண்ணிக்கையாக 1,08,233 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் மொத்தம் 24,25,742 மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளன.
ஜனவரியில் ஒரு ஆய்வகத்தில் மட்டும் கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 385 அரசு ஆய்வகங்கள், 158 தனியார் ஆய்வகங்களில் இந்தப் பரிசோதனையை உருவாக்கி வசதிகள் மிக வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் அனைத்து ஆய்வகங்கள், மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் துறை ஆய்வகங்களை ஒருங்கிணைத்து நாட்டில் கோவிட் பரிசோதனைத் திறன் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகளைத் தீவிரப்படுத்துவதற்காக TrueNAT மற்றும் CBNAAT போன்ற மருத்துவப் பரிசோதனைக் கருவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 மருத்துவப் பரிசோதனைக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. முந்தைய வரையறைகளுடன் சேர்த்து, கோவிட்-19 நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும் முன்களப்பணியாளர்கள், தீவிர மூச்சுக்கோளாறு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகள், நாடு திரும்பியவர்கள் மற்றும் குடிபெயர்ந்து சென்று சொந்த ஊர் திரும்பியவர்களில் தீவிர மூச்சுக்கோளாறு உள்ள அனைவருக்கும் உடல்நலம் குன்றிய 7 நாட்களுக்குள் மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications