இந்தியா கொரோனா பாதிப்பு 13ஆயிரமாக சரிவு... 1,81,075 பேருக்கு சிகிச்சை
நாடு முழுவதும் புதிதாக 13,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை
டெல்லி: நாடு முழுவதும் புதிதாக 13,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 54 நாட்களில் இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு சரிந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,81,075 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 21,056 குறைவு ஆகும்.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்றாம் அலையில் மூன்று லட்சம் பேருக்கு மேல் பதிவானது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.

கடந்த மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் மேல் பதிவான கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து 50 ஆயிரத்திற்கும் மேலே பதிவானது. தற்போது கொரோனா தினசரி பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. தற்போது ஊரடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதிதாக கொரோனா தொற்று நேற்று 16 சதவீதம் குறைந்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 29ஆம் தேதி நிலவரப்படி தினசரி பாதிப்பு 13,154 ஆக இருந்தது. மறுநாள் 16 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் கடந்த 54 நாட்களில் இல்லாத அளவில் தொற்று பாதிப்பு சரிந்துள்ளது. மொத்த பாதிப்பு 4,28,51,929 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 34,226 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,21,58,510 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 128 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 235 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,12,344 ஆக உயர்ந்தது.
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,81,075 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 21,056 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் இதுவரை மக்களுக்கு 175. 83 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 35,50,868 டோஸ் தடுப்பூசிகள் அடங்கும்.
இதற்கிடையே நேற்று 10,84,247 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை 76.12 கோடியாக உயர்ந்துள்ளது.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி











Click it and Unblock the Notifications