இந்தியாவில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு- நேற்று 6,990 பேருக்கு பாதிப்பு; 190 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 6,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் 190 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்திலான கொரோனா பாதிப்பு, கொரோனா தடுப்பூசிகள் தொடர்பான மத்திய அரசின் அறிக்கை: மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து 156 நாட்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. இது 551 நாட்களில் மிகவும் குறைவாகும்.
Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா?
குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.35 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிக அதிக அளவு. கடந்த 24 மணி நேரத்தில் 10,116 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,40,18,299 என அதிகரித்துள்ளது.
ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,00,543 இது 546 நாட்களில் குறைந்தது. கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து தற்போது 0.29 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.
பாதிப்பு விகிதம் குறைவு
தினசரி பாதிப்பு விகிதம் 0.69, இது கடந்த 57 நாட்களாக 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 16 நாட்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 0.84 சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 92 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.
மரணங்கள்
கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக ஒருநாள் கொரோனா மரணங்கள் 600ஐ தாண்டியதாக இருந்தது. நேற்று 300க்கும் கீழே இருந்தது. இன்று 200க்கும் கீழே குறைந்து 190 ஆக உள்ளது. நாட்டில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது.
Recommended Video
பரிசோதனைகள்- தடுப்பூசிகள்
கடந்த 24 மணி நேரத்தில் 10,12,523 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 64.13 கோடி கொவிட் பரிசோதனைகள் (64,13,03,848) செய்யப்பட்டுள்ளன. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 78,80,545 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 123.25 கோடியைக் (1,23,25,02,767) கடந்தது. 1,28,09,178 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 123.25 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. இவ்வாறு மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.