இந்தியர்களுக்கு இந்தியாவை தெரியும்... வெளி சக்திகள் தலையிட வேண்டாம் - ரிஹானாவிற்கு சச்சின் பதிலடி
இந்தியர்களுக்கு இந்தியாவை தெரியும் என்று கூறியுள்ள சச்சின் டெண்டுல்கர், இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம் பங்கேற்பாளர்கள் அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார்
டெல்லி: இந்தியர்களுக்கு இந்தியாவை தெரியும் என்று கூறியுள்ள சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். வெளிநாட்டவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாம் என்றும் பங்கேற்பாளராக முயற்சி செய்ய வேண்டாம் என்று பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி எல்லையில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக உலகளவில் சில பிரபலங்கள் கருத்து வரும்நிலையில் பிரபல பாடகியும், கலைஞருமான ரிஹானாவும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு டுவிட் செய்துள்ளார். அதில் 'இணையதள துண்டிப்பு குறித்து ஏன் யாரும் பேசவில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரது டுவிட் சமூக வலைதளங்களில் வைரலானது. ரிஹானாவிற்கு பதில் அளித்துள்ள சில ரசிகர்கள், இந்திய விவசாய போராட்டத்தில் இருந்து விலகி இருக்கும்படியும், சிலர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தும் காரசார கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பாலிவுட் நடிகை கங்கனாவும் ஒரு ட்விட் செய்துள்ளார். அதில், 'யாரும் இதைப் பற்றி பேசவில்லை; ஏனெனில் அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் தீவிரவாதிகள். சீனா போன்ற நாடுகள் நம் நாட்டை கையகப்படுத்தி, இங்கு சீன காலனியை உருவாக்க முயற்சிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் அமைதியாக இருக்கும் ஒரு முட்டாள். உங்களது நாட்டை விற்பவர்கள் போன்ற முட்டாள்கள் நாங்கள் அல்ல' என்று கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டரில் கருத்து போர் நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கும் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டில், 'இந்திய விவசாயிகள் போராட்டத்துடன் நாங்களும் துணை நிற்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் விவசாய போராட்டம் குறித்து பதிவிடப்படும் கருத்துக்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பதற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
India’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants.
— Sachin Tendulkar (@sachin_rt) February 3, 2021
Indians know India and should decide for India. Let's remain united as a nation.#IndiaTogether #IndiaAgainstPropaganda
இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம்; ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியர்களுக்கு இந்தியாவை தெரியும், ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் இந்த பதிவு உலகளவில் வைரலாகி வருகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications