புதுவகை கொரோனா வைரசை பார்த்து மக்கள் பீதியடைய வேண்டாம்- ஹர்ஷ் வர்தன்
டெல்லி: இங்கிலாந்தில் புதுவகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது குறித்து அரசுக்கு தெரியும் என்றும், முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து உள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வரும் காரணத்தால் ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை துண்டித்து உள்ளன. சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து இத்தாலி சென்ற பயணி ஒருவரிடம் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் இருப்பது கண்டறியப்பட்டதால் இத்தாலியில் பரபரப்பு நிலவுகிறது. அந்த நோயாளி தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

இந்த வகை வைரஸ் வேகமாக பரவுவதால் கட்டுப்படுத்துவது கஷ்டம் என்கிறது இங்கிலாந்து சுகாதாரத் துறை வட்டாரம். இந்த நிலையில்தான் இந்தியாவில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதன் பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், புதிய வகை கொரோனா வைரஸ் நோய் பரவல் குறித்த செய்திகளால் பொதுமக்கள் பீதியடைய தேவை கிடையாது. அரசும் முழு அளவில் தயார் நிலையில் இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக அனைத்து வகையான தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து மக்களை காப்பாற்றுவதற்காக முழு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
எந்த மாதிரியான முன்னெச்சரிக்கைகளை எடுத்து நோய் பரவலை குறைக்க வேண்டும் என்பதை அரசு அறிந்துள்ளது. எனவே மக்கள் பயப்படாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார்.
இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதில் பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு.. குறிப்பாக, டெல்லிக்கு வரக்கூடிய விமானங்கள் அனைத்திற்கும் உடனடியாக மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் புதிய வகை கொரோனா வைரஸ் டெல்லியில் பரவுவதை தடுக்க வேண்டும் என்பது கெஜ்ரிவால் கோரிக்கை.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications