புதுவகை கொரோனா வைரசை பார்த்து மக்கள் பீதியடைய வேண்டாம்- ஹர்ஷ் வர்தன்
டெல்லி: இங்கிலாந்தில் புதுவகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது குறித்து அரசுக்கு தெரியும் என்றும், முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து உள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வரும் காரணத்தால் ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை துண்டித்து உள்ளன. சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து இத்தாலி சென்ற பயணி ஒருவரிடம் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் இருப்பது கண்டறியப்பட்டதால் இத்தாலியில் பரபரப்பு நிலவுகிறது. அந்த நோயாளி தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

இந்த வகை வைரஸ் வேகமாக பரவுவதால் கட்டுப்படுத்துவது கஷ்டம் என்கிறது இங்கிலாந்து சுகாதாரத் துறை வட்டாரம். இந்த நிலையில்தான் இந்தியாவில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதன் பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், புதிய வகை கொரோனா வைரஸ் நோய் பரவல் குறித்த செய்திகளால் பொதுமக்கள் பீதியடைய தேவை கிடையாது. அரசும் முழு அளவில் தயார் நிலையில் இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக அனைத்து வகையான தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து மக்களை காப்பாற்றுவதற்காக முழு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
எந்த மாதிரியான முன்னெச்சரிக்கைகளை எடுத்து நோய் பரவலை குறைக்க வேண்டும் என்பதை அரசு அறிந்துள்ளது. எனவே மக்கள் பயப்படாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார்.
இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதில் பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு.. குறிப்பாக, டெல்லிக்கு வரக்கூடிய விமானங்கள் அனைத்திற்கும் உடனடியாக மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் புதிய வகை கொரோனா வைரஸ் டெல்லியில் பரவுவதை தடுக்க வேண்டும் என்பது கெஜ்ரிவால் கோரிக்கை.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications