ஜூன் 1 முதல் நாள்தோறும் ஏசி பெட்டிகள் அல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும்: அமைச்சர் பியூஷ் கோயல்
டெல்லி: ஜூன் 1-ந் தேதி முதல் ஏசி பெட்டிகள் அல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
கொரோனா லாக்டவுன் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல சரக்கு ரயில்கள் முழுவீச்சில் இயங்கின. பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

மே 1-ந் தேதி முதல் இடம்பெயர் தொழிலாளர்களுக்காக மாநில அரசுகளின் ஏற்பாட்டில் சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் ஏசி பெட்டிகள் கொண்டவை.
இந்நிலையில் ஜூன் 1-ந் தேதி முதல் ஏசி பெட்டிகள் அல்லாத 200 ரயில்கள் நள்தோறும் இயக்கப்படும் என்ரு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்து பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 200 ரயில்களும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளதாகவும் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications