வெடிக்கும் போர்? வலுத்த மோதலால் ஈரான் - இஸ்ரேலுக்கு யாரும் போகாதீங்க.. வெளியுறவுத்துறை ‛அட்வைஸ்’
டெல்லி: ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காசா போருக்கு மத்தியில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இருநாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் தான் இந்தியர்கள் யாரும் ஈரான் மற்றும் இஸ்ரேல் செல்ல வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை முக்கிய அறிவுரை வழங்கி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு போரை தொடங்கியது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போருக்கு எல்லை பிரச்சனை தான் காரணம். அதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவுக்கும் இடையே போர் தொடங்கியது. இந்த போரும் தொடர்ந்து வருகிறது.

இந்த 2 போரிலும் பல ஆயிரம் மக்கள், படை வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் பெருமளவு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகள் போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வலியுறுத்தி வருகிறது. ஆனால் யாரும் செவிசாய்க்கவில்லை.
இத்தகைய சூழலில் தான் அடுத்ததாக இஸ்ரேல் - ஈரான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அதாவது காசா மீது இஸ்ரேல் போர் தொடங்கியபோதே ஈரான் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ஈரான் ஆதரவில் லெபனான் நாட்டில் செயல்படும் அமைப்பை சேர்ந்தவர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
வெடிக்க தயாராகும் மத்திய கிழக்கு! ஈரானை சமாதானப்படுத்த அமெரிக்கா முயற்சி! சீனாவுடன் பேச்சுவார்த்தை
இந்த மோதல் என்பது தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலின் ராணுவ மையங்களைக் குறிவைத்து 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் டஜன் கணக்கான ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் தொடுக்க ஈரான் திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
இதற்கு இஸ்ரேல், ‛‛ஈரான் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், நாங்களும் பதிலுக்கு திருப்பி தாக்குவோம். யாருக்கும் அஞ்சமாட்டோம்’’ என தெரிவித்துள்ளது. இதனால் இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் வலுத்து போர் மேகம் சூழ்ந்துள்ளது. மேலும் எப்போது வேண்டுமானாலும் இருநாடுகள் தாக்குதல், பதில் தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இந்திய வெளியுறவுத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‛இஸ்ரேல், ஈரான் பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்தியர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை ஈரான் அல்லது இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம். அதேவேளையில் ஈரான், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் உடனே இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி பாதுகாப்பாக இருப்பதோடு, பாதுகாப்புக்க தேவையான முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரான் தினமும் 1310 கோடி சம்பாதிக்கிறது.. ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது தெரியுமா? -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications