உத்தரகாண்ட் காங்.கில் வெடித்த உட்கட்சி பூசல்.. ஹரிஷ் ராவத் போட்ட ட்வீட்.. சோனியாவுக்கு புது தலைவலி!
டெல்லி: பொதுவாக ஒரு கட்சியில் உட்கட்சி பூசல் அவ்வப்போது தலைதூக்குவது வழக்கம். ஆனால் காங்கிரசையும், உட்கட்சி பூசலையும் பிரிக்க முடியாது.ஏனெனில் பல மாநிலங்களில் காங்கிரசில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுவது தொடர்கதையாகி விட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் உட்கட்சி பூசல் காரணமாக பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் முதல்வர் பதவியையும் துறந்து, கட்சியில் இருந்தும் விலகி தனிகட்சியே ஆரம்பித்து விட்டார்.

உட்கட்சி பூசல்
இதேபோல் ராஜஸ்தான் மாநில காங்கிரசிலும் காலம், காலமாக நடந்து வரும் உட்கட்சி சண்டை இன்னும் நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது. கட்சியில் தொடர்ந்து வரும் பிரச்சினையை தீர்த்து வைப்பதே சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நிரந்தர வேலையாகி விட்டது. இதோ சோனியா காந்திக்கு அடுத்த தலைவலி வந்து விட்டது. பாஜக ஆட்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.

ஹரிஷ் ராவத் போட்ட ட்வீட்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும் உத்தரகாண்ட் பொறுப்பாளருமான தேவேந்திர யாதவ்வுக்கும், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத்துக்கும் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் ஹரிஷ் ராவத் போட்ட ட்வீட் ஒன்று உட்கட்சி பூசல் இருப்பதை வெளிப்படையாக உணர்த்துவதுபோல் உள்ளது.

கைகளையும், கால்களையும் கட்டி உள்ளனர்
''தேர்தல் எனும் கடலில் நீந்த வேண்டிய நிலையில் அதிகாரம் பல முதலைகளை அங்கே விட்டுச் சென்றிருக்கிறது. இவற்றை மீறி நாம் நீந்தி முன்னேற வேண்டும் என்னும்போது என் கைகளையும், கால்களையும் கட்டி உள்ளனர். எல்லாம் கைமீறி போயிட்டது. என் மனதின் ஒரு மூலையில் இருந்து ரகசியமாக ஒரு குரல் எழுகிறது. ஓய்வெடுக்க வேண்டிய நேரமிது என்று மனதில் பலமுறை எண்ணம் வருகிறது. குழப்பத்தில் இருக்கிறேன். இந்த புத்தாண்டு புது வழியை காட்ட வேண்டும். கடவுள் நல்வழி காட்டுவார் என நம்புகிறேன்'' என்று ஹரிஷ் ராவத் கூறியுள்ளார்.

நேரம் வரும்போது சொல்கிறேன்..
அதாவது தேவேந்திர யாதவ்வையும், ராகுல் காந்தியையும் குறிப்பிடுவதுபோல் ட்வீட் செய்துள்ளார் ஹரிஷ் ராவத். இதனால் உத்தரகாண்ட் காங்கிரசில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை ஹரிஷ் ராவத்திடம் சர்ச்சைகுரிய ட்வீட் குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், ''
நேரம் வரும்போது எல்லாவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களிடம் பேசாவிட்டால் வேறு யாரிடம் பேசுவேன்? நான் உங்களைக் கூப்பிடுகிறேன். இப்போதைக்கு வேடிக்கை மட்டும் பாருங்கள்' என்று கூறியுள்ளார்.
-
ராகுல் வரலைன்னா.. பெரிய சிக்கலாகிடும்.. டெல்லியில் பதறிய தமிழக காங்கிரஸ் தலைகள்! என்னாச்சு? -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
உண்மையான காங்கிரஸ் விஜய் பக்கமா.. அப்போ போலியான காங்கிரஸ் யார்? ப.சிதம்பரம் பதில்! -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications