உத்தரகாண்ட் காங்.கில் வெடித்த உட்கட்சி பூசல்.. ஹரிஷ் ராவத் போட்ட ட்வீட்.. சோனியாவுக்கு புது தலைவலி!
டெல்லி: பொதுவாக ஒரு கட்சியில் உட்கட்சி பூசல் அவ்வப்போது தலைதூக்குவது வழக்கம். ஆனால் காங்கிரசையும், உட்கட்சி பூசலையும் பிரிக்க முடியாது.ஏனெனில் பல மாநிலங்களில் காங்கிரசில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுவது தொடர்கதையாகி விட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் உட்கட்சி பூசல் காரணமாக பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் முதல்வர் பதவியையும் துறந்து, கட்சியில் இருந்தும் விலகி தனிகட்சியே ஆரம்பித்து விட்டார்.

உட்கட்சி பூசல்
இதேபோல் ராஜஸ்தான் மாநில காங்கிரசிலும் காலம், காலமாக நடந்து வரும் உட்கட்சி சண்டை இன்னும் நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது. கட்சியில் தொடர்ந்து வரும் பிரச்சினையை தீர்த்து வைப்பதே சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நிரந்தர வேலையாகி விட்டது. இதோ சோனியா காந்திக்கு அடுத்த தலைவலி வந்து விட்டது. பாஜக ஆட்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.

ஹரிஷ் ராவத் போட்ட ட்வீட்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும் உத்தரகாண்ட் பொறுப்பாளருமான தேவேந்திர யாதவ்வுக்கும், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத்துக்கும் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் ஹரிஷ் ராவத் போட்ட ட்வீட் ஒன்று உட்கட்சி பூசல் இருப்பதை வெளிப்படையாக உணர்த்துவதுபோல் உள்ளது.

கைகளையும், கால்களையும் கட்டி உள்ளனர்
''தேர்தல் எனும் கடலில் நீந்த வேண்டிய நிலையில் அதிகாரம் பல முதலைகளை அங்கே விட்டுச் சென்றிருக்கிறது. இவற்றை மீறி நாம் நீந்தி முன்னேற வேண்டும் என்னும்போது என் கைகளையும், கால்களையும் கட்டி உள்ளனர். எல்லாம் கைமீறி போயிட்டது. என் மனதின் ஒரு மூலையில் இருந்து ரகசியமாக ஒரு குரல் எழுகிறது. ஓய்வெடுக்க வேண்டிய நேரமிது என்று மனதில் பலமுறை எண்ணம் வருகிறது. குழப்பத்தில் இருக்கிறேன். இந்த புத்தாண்டு புது வழியை காட்ட வேண்டும். கடவுள் நல்வழி காட்டுவார் என நம்புகிறேன்'' என்று ஹரிஷ் ராவத் கூறியுள்ளார்.

நேரம் வரும்போது சொல்கிறேன்..
அதாவது தேவேந்திர யாதவ்வையும், ராகுல் காந்தியையும் குறிப்பிடுவதுபோல் ட்வீட் செய்துள்ளார் ஹரிஷ் ராவத். இதனால் உத்தரகாண்ட் காங்கிரசில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை ஹரிஷ் ராவத்திடம் சர்ச்சைகுரிய ட்வீட் குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், ''
நேரம் வரும்போது எல்லாவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களிடம் பேசாவிட்டால் வேறு யாரிடம் பேசுவேன்? நான் உங்களைக் கூப்பிடுகிறேன். இப்போதைக்கு வேடிக்கை மட்டும் பாருங்கள்' என்று கூறியுள்ளார்.
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications