நிதிஷ்குமார்தான் முதலமைச்சர் வேட்பாளர்.. ஒரு வழியாக ஒப்புக்கொண்ட அமித்ஷா! NDA-ல் குழப்பம் இல்லையாம்!
டெல்லி: பீகார் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளர் என யாரும் அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது முதல்வராக இருக்கும் நிதிஷ்குமார், இந்த தேர்தலில் பாஜகவால் கை விடப்படுவார் என்று பேச்சுக்கள் அடிபட்டிருந்த நிலையில், தற்போது நிதிஷ்குமார்தான் எங்கள் முதல்வர் வேட்பாளர் என்று அமித்ஷா உறுதியாக கூறியிருக்கிறார்.
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளுக்கு நவ.6 மற்றும் நவ.11 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை கைப்பற்ற வேண்டும் எனில் 122 தொகுதியை கைப்பற்ற வேண்டும். மாநிலத்தில் நிதிஷ்குமார் முதலமைச்சராக இருக்கிறார். அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருக்கிறது.

சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் முதலமைச்சர் ஆகலாம் என்று நிதிஷ்குமார் கனவு கண்டுக்கொண்டிருந்த நிலையில், அவரது கனவில் அடுத்தடுத்து இடியை இறக்கியது பாஜக. முதலில் தொகுதி பங்கீட்டை சரிசமமாக பிரித்தது. அதாவது பாஜக 101 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இது இதற்கு முன்னர் நடக்காத ஒரு விஷயம். தேர்தல் கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் ஐக்கிய ஜனதா தளத்தின் கைதான் ஓங்கியிருக்கும். ஆனால் இந்த முறை தொகுதி பங்கீட்டை சரிசமமாக பிரித்ததன் மூலம் நிதிஷ் குமாருக்கு செக் வைத்தது.
இரண்டாவது செக், முதலமைச்சர் வேட்பாளர். தேர்தலில் ஜெயித்தால் முதல்வர் ஆகிவிடலாம் என்று நிதிஷ்குமார் எதிர்பார்த்திருந்தார். ஆனால், நிதஷ்குமார்தான் எங்கள் முதல்வர் வேட்பாளர் என்று பாஜகவில் யாரும் வாயை திறந்து சொல்லவில்லை. அமித்ஷா கூட, "ஜெயித்த பின்னர் யார் முதல்வர் என்று எம்எல்ஏக்கள் தீர்மானிப்பார்கள்" என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார். இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நிதிஷ்குமார்தான் முதலமைச்சர் என்று அமித்ஷா உறுதியாக கூறியிருக்கிறார்.
பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இதை கூறியிருக்கிறார். "நிதிஷ்குமார்தான் எங்கள் முதலமைச்சர். அவர் தலைமையில்தான் தேர்தலை எதிர்கொள்கிறோம். இதில் என்டிஏ கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை. முதலமைச்சர் தொடர்பாக வதந்திகள் பரப்ப கூடாது" என்று கூறினார். அதேபோல நிதிஷ்குமாரின் உடல் நிலை குறித்த கேள்விக்கு, "நிதிஷ்குமார் தினமும் 5 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதுவே ஆரோக்கியத்தின் அடையாளம்தான்" என்று கூறியிருக்கிறார்.
என்டிஏ தேர்தல் அறிக்கை வெளியீட்டில் நிதிஷ்குமார் பேச அனுமதிக்கப்படாதது, தொகுதி பங்கீட்டில் சமரசம் என அடுத்தடுத்து நிதிஷ்குமாரை பாஜக வெளிச்சத்திற்கு வர விடாமல் பார்த்துக்கொண்டது, பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்நிலையில், இந்த சலசலப்புகளுக்கு அமித்ஷாவின் பதில் முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறது.
என்டிஏ கூட்டணியில்தான் இப்படி எனில், மறுபுறம் காங்கிரஸ், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மகாபந்தன் கூட்டணியிலும் இதே கதைதான். இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் இருக்க வேண்டும் என்று கூட்டணியில் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் விரும்பின. ஆனால், காங்கிரஸ் மட்டும் பிடிவாதம் பிடித்தது. தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. எனவே, கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருந்து. 2014லிலிருந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. இப்படிபட்ட நிலையில் எதுக்கு வெட்டி வீராப்பு? என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
தொடர் நெருக்கடியை அடுத்து தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications