மக்களுக்காக மக்களால் மார்ச் 22-ல் கடைபிடிக்கப்படும் மக்கள் ஊரடங்கு - முக்கிய அம்சங்கள்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று மக்களுக்காக மக்களாலேயே மார்ச் 22-ல் ஊரடங்கு நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படுகிறது. கொரோனா எனும் கொடிய வைரஸை மக்களே எதிர்கொள்வதற்காக இந்த மக்கள் ஊரடங்கு நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.
உலகையே பேரழிவை நோக்கி இழுத்துச் செல்கிறது கொரோனா வைரஸ். இத்தாக்குதல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று இரவு உரையாற்றினார்.

இந்த உரையில் அடுத்து வரும் நாட்களுக்கு பொதுமக்கள் எப்படியான வாழ்வியல் முறைகளை கடைபிடிக்க வேண்டும்- இதன் மூலமாக கொரோனா வைரஸை எப்படி எதிர்கொள்வது என விவரித்தார். இதில் மிக முக்கியமாக வரும் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தாங்களே ஊரடங்கு நிலைமையை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதன் முக்கிய அம்சங்கள்
- மார்ச் 22 ஜனதா ஊரடங்கு அல்லது சுய ஊரடங்கு அல்லது மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கும் போது சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது
- மக்களின் ஊரடங்கு என்பது காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நீடிக்கும்.
- மக்களின் ஊரடங்கை காவல்துறை, மருத்துவ துறை, ஊடகங்கள் உள்ளிட்ட அன்றாட பணிகளில் ஈடுபட்டிருப்போர் பின்பற்ற தேவை இல்லை.
- மருத்துவப் பணி உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டோருக்கு மார்ச் 22 மாலை 5 மணிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
- மக்களின் ஊரடங்கு குறித்து ஒவ்வொருவரும் 10 பேருக்காவது எடுத்து விளக்கி இதில் பங்கேற்க செய்ய வேண்டும்.
- இப்போது கடைபிடிக்கப்படும் மக்களின் ஊரடங்கு கட்டுப்பாடு பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க எதிர்காலத்திலும் உதவும்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications